ஆச்சியை ரஜினி பிடிப்பார் : செல்லூர் ராஜூ
ஆச்சியை ரஜினி பிடிப்பார் என சொன்னதற்காக செல்லூர் ராஜூவினை விரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
இதிலென்ன ஆச்சரியம்?
ராமசந்திரனே “நான் தமில்நாத்து ஆச்சி பிதிப்பேன், அடிக்கடி பிதிப்பேன் ,
என் ஆச்சி உங்கள் ஆச்சி. நான் பிடித்த ஆச்சி என் ரத்ததின் ரத்தங்களின் ஆச்சி, நீங்கலே ஆச்சி பிடித்து கொடுத்தீர்கள்” என்றுதான் சொல்லிகொண்டிருந்தார்
இது போல உல்ல ஆச்சி (உள்ளாட்சி), நகர ஆச்சி, பேரூர் ஆச்சி, மாநகர ஆச்சி எல்லா ஆச்சியும் எனக்கே என பகிரங்கமாக சொல்லிகொண்டிருந்தார்
அப்பொழுது எல்லாம் விட்டுவிட்டு செல்லூர் ராஜு என்றால் பிடித்துகொள்கின்றார்கள். அவர்கள் கட்சி கலாச்சாரபடி அவர்கள் பிதாமகன் சொன்னபடிதானே பேசியிருக்கின்றார்
அதிமுக இப்படி ஆட்சியினை ஆச்சி என பேசாவிட்டால்தான் ஆச்சரியம்
ஆனாலும் காரைகுடி ஆச்சி என குறிப்பிட்டு சொன்னது ஓவர்தான்
இனி என்ன செய்யலாம்? எஸ்.வீ சேகர்தான் வழிகாட்ட வேண்டும்