அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள்

அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள், அவர் சமுதாயத்திற்கு நிறைய செய்தார்?

என்ன செய்தார்?

அவரால் பலர் வாழ்ந்தனர் , வாழ்கின்றனர். அவரின் நாடார் பற்று அப்படி

என்னடா செய்தார்?

யாரெல்லாம் வேற்றுசாதிகாரன் மணல் குவாரி , ரியல் எஸ்டேட் எல்லாம் வச்சிருந்தார்களோ அதை எல்லாம் நாடார் சாதிக்கு வாங்கி கொடுத்தார்

டேய் மணல் கொள்ளையே பெரும் கொடுமை, அதை வாங்கிகொடுத்தார்னு சொல்றபாரு உன்னை எல்லாம்

அட இங்க எல்லாம் அப்படித்தாண்ணே, சமுதாயம் வாழ அப்படித்தான் செய்யணும்

ஓஹோ

அவர் செய்ததாக சொன்ன கொலை, மிரட்டல் எல்லாம் சமுதாயத்திற்காக‌

அப்படியா

சமுதாயத்திற்கே அவர் ஒரு எடுத்துகாட்டு

டேய் அவர் கெடுத்து காட்டியவர்

சமுதாயம்ணா அவருக்கு அப்படி உயிரு, சமுதாயம் வளர அப்படி பாடுபடுவாரு, அப்படி வெறி பிடிச்சவரு

பின் ஏன் நாடார் பெண்ணை கட்டாமல் மும்பை சேட் பெண்ணை கட்டினார்?

ஹிஹி அது காதல்ணே

ஏண்டா நாடாருக்காக கொலை எல்லாம் செஞ்வருக்கு காதல் நாடார் பொண்ணுமேல வராதா? இனி அவர் பிள்ளைகள் எல்லாம் எந்த சாதிடா?

ஹிஹிஹி பாதி நாடார்னே

போங்கடா டேய், நாடார்னு சொல்லி சம்பாதிக்கணும் ஆனா நாடார் பெண்ணை கட்ட கூடாது, ஏதாவது பணக்காரி சேட் மாதிரி கட்டிட்டு பேச்சபாரு

அண்ணே அதபத்தி பேசாதீங்க, அவரோட சமுதாய போர் மட்டும் பாருங்க‌

டேய் அவர் என்ன தொழில் செய்தார்? ஏது இவ்வளவு பணம்? இவ்வளவு நாள் தலைமறைவாக , ஸ்டார் ஹோட்டல்ல தங்க பணம் எப்படிடா?

அண்ணே அதெல்லாம் வருமுண்ணே, சும்மா பேசிட்டு இருக்க கூடாது. அண்ணனுக்கு ஆயிரகணக்கான தம்பிங்கண்ணே , உங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது, நீங்க ஒரு சாதி கெட்ட பய‌

ஒஹோ அப்படியே இருந்துட்டு போறேன் ஓடிரு, இனி ராக்கெட் ராஜா, சேட்டிலைட் சேகருன்னு இந்தபக்கம் வந்த மொவன கொன்னுருவேன்

அண்ணே ஓருநாள் ஊருக்கு வரணும், இங்கெல்லாம் சாதி இல்லாம அரசியலும் இல்ல, வாழவும் முடியாது. அப்ப எங்க உதவி தேவைபடும் அப்போ உங்கள பார்த்துகுவோம்ணே

அதுவரை நீ ராக்கெட் ராஜா கூட உள்ளே போகாம இருடா, உனக்கே பாதுகாப்பில்ல இவரு ஊர பாதுகாக்க போராராம்