கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது

அது கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது

காவேரி முதல் ஏராளமான விஷயங்களில் தோற்று கொண்டிருக்கும் பழனிச்சாமியினை பதவி விலக சொல்லாமல், அந்த விஷாலை பதவி விலகு என கோஷமிட்டு கொண்டிருக்கின்றார்கள்


எஸ்.வீ சேகரை என்பவர் இங்கு காட்சி அளித்தார், அங்கு காட்சி அளித்தார் என பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள், திடீரென பகிரங்கமாக மேடையிலே காட்சி அளித்தார் என்கின்றார்கள்

ஆனால் கைது செய்யுமுன் மறைந்துவிடுகின்றாராம், ராமாயணத்து இந்திரஜித்தன் வகையறா போலிருக்கின்றது

இப்படித்தான் அன்புசெழியனை தேடினார்கள், அவரோ அமைச்சர் வீட்டு கல்யாணத்தில் தரிசனமானார், அவரையும் கடைசி வரை கைது செய்ததாக தகவல் இல்லை, பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை

இப்பொழுது தமிழக பிஜேபி தலமைகள் புது ராகம் தொடங்கிவிட்டன, அதாவது எஸ்வி சேகர் என்பவர் எவரோ ஒருவரின் பதிவினைத்தான் ஷேர் செய்தார், அவரை ஏன் விட்டுவிட்டார்கள் என இழுக்க தொடங்கிவிட்டார்கள்

உண்மையில் அந்த பதிவினை எழுதியவர் அமெரிக்காவில் இருகின்றார்

ஆக அவர்தான் குற்றவாளி என கையினை நீட்டுகின்றார்கள்

விரைவில் எஸ்வீ சேகர் உண்மை குற்றவாளியினை விஜயகாந்த் ஸ்டைலில் பிடிக்க அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றார் என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை