பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox)
பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது
வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும்
இந்நோய்க்கு பின்னர் மருந்து கண்டுபிடிக்கபட்டது, இதே நாளில் கண்டுபிடிக்கபட்டதால் இந்நாள் பெரியம்மை எதிர்ப்பு நாளாக கருதபடுகின்றது
மருந்து கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை.
ஆனால் இதே பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன
கிட்டதட்ட 30 ஆண்டுகள் கடுமையாக பாதித்தது, தமிழகம் கடும் அவஸ்தைபட்டது
அப்படி ஒரு அவஸ்தை, அது படுத்தியபாட்டின் பல வடுக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன
இதில் பெரியம்மை இப்பொழுது இல்லை, சின்னம்மை வைத்தியசாலையில் முடக்கபட்டு, அதை முற்றிலுமாக தடுக்கும் கட்டத்தில் இருக்கின்றது.
பழைய வீரியம் இல்லை என்பதால் இப்போதைக்கு ஆபத்த்தில்லை
இதனால் உலகம் போலவே பெரியம்மை சின்னம்மை நோயிலிருந்து தமிழகமும் விடுபட்டாலும் பெரியம்மை விட்டு சென்ற கிருமிகளின் தாக்கம் ஓரளவு இருக்கின்றது
அந்த கிருமிகளை சாகவிடாமல் செய்து தமிழக நலன் கெடுக்க பலர் சதி செய்கின்றார்கள். அந்த மனிதகுல விரோதிகளை ஐநாவில் புகார் செய்ய வேண்டும்
எஞ்சி இருக்கும் அந்த கிருமிகளும் விரைவில் அழிக்கபட வேண்டும்