மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார்… சிங்கப்பூரில் தமிழ் தொடரும்
மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார், டோல் கேட்டை அகற்றிவிட்டார் என சில தும்பிகள் குதித்துகொண்டிருக்கின்றன
தேர்தல் முடிந்த மறுநாள் பொதுவிடுமுறை எனினும் பங்குசந்தை பாதிக்கபட கூடாது என்பதற்காக நள்ளிரவிலே வேலை செய்ய தொடங்கினார் 92 வயது மகாதீர்
ஜிஎஸ்டி ஒரேடியாக தூக்க முடியாது, கட்டம் கட்டமாக மாற்றபடும் என்கின்றார்கள், கொஞ்ச நாள் ஆகும்
இந்த டோல்கேட் எல்லாம் அகற்றபடவில்லை, அதை பற்றி எல்லாம் அறிவிப்பு இல்லை, எல்லோரும் வழக்கம் போல் காசுகட்டிவிட்டுத்தான் வருகின்றார்கள்
இந்த தும்பிகள் அட்டகாசம் தாளவில்லை
கனடா பிரதமரை விட்டுவிட்டு மகாதீர் பக்கம் வந்தாயிற்று
ஆனால் சிங்கள அதிபர் மலேசியா வந்தபொழுது மகாதீரை தேடி சென்று பார்த்து இருவரும் ஆலோசித்தார்கள் என்பதை மட்டும் தும்பிகள் வசமாக மறந்துவிடுகின்றனர்
சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ் தொடரும் : அறிவிப்பு
இவ்வளவு நாளும் அப்படித்தானே தொடர்கின்றது? இப்பொழுது என்ன அறிவிப்பு
அந்த லிட்டில் இந்தியா கலவரத்திற்கு பின் சிங்கப்பூர் அரசின் பார்வை மாறுகின்றது, விசாக்களில் கெடுபிடி அதிகம்
இது போக இந்த தும்பிகளின் சில விஷயங்களையும் அந்நாட்டு அரசு ரசிக்கவில்லை
இதனால் பலவாறு முணுமுணுப்புகள் வந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகின்றது
இதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், இதுவரைக்கும் அப்படி ஒரு சிந்தனை இல்லை எனினும் சிலர் எச்சரிக்கையாய் இருப்பது நலல்து என்பது