திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

அறிவாலயம் கூட சில கொஞ்சம் நிலங்களை ஆக்கிரமித்து கட்டபட்டது என முன்பு புகார் வந்தது, அதனையும் சிறை ஆக்கலாமா?

தமிழகம் முழுக்க திமுகவினர் ஆக்கிரமித்த நிலம் ஏராளம், அதில் எல்லாம் சிறைகட்டினால் மொத்த உலக குற்றவாளிகளையும் அடைக்கலாம்

ஆனாலும் அழகிரி மேல் இவருக்கு இவ்வளவு கோபம் ஆகாது, அழகிரியின் கல்லூரி ஆக்கிரமித்த நிலம்பற்றி வராத செய்திகள் இல்லை, அது இப்பொழுது தணிந்திருந்தது

ஸ்டாலின் அதனை இப்பொழுது இழுத்து எடுக்கின்றார்

என்னதான் அரசியல் எதிரி என்றாலும் கொஞ்சமேனும் அண்ணன் பாசம் வேண்டாமா?

நில ஆக்கிரமிப்பில் திமுகவினர் எப்படி எல்லாம் சிக்கி இருந்தனர், இப்படி சாஸ்திரா பலகலைகழகத்தை சீண்டுகின்றேன் என மொத்த திமுகவினரையும் சிக்கலில் விடுவது தலைவருக்கு அழகா?

இன்னும் அனுபவம் போதவில்லை