தமிழகம் பெரியார் பூமி , இங்கு பாஜக நுழைய முடியாதாம்

Image may contain: 1 person, screen and textதமிழகம் பெரியார் பூமி அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.

எந்த சித்தாந்தையும் தாங்கி நடத்த நல்ல வாரிசு தலைவர்கள் வேண்டும்

லெனினுக்கு பின் ஸ்டாலின் அப்படி தாங்கினார், அதன் பின் வந்த தலைவர்கள் உருப்படி இல்லை சோவியத் சிதைந்தது

ஆனால் மாவோவிற்கு பின் இன்று ஜின்பெங்க் வந்து தாங்கியதில் சீனா நீடிக்கின்றது

இங்கு பெரியாரின் அரசியல்வாரிசாக அண்ணா வந்தார், அவரை தொடர்ந்து கலைஞர் வந்தார்

அதன் பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல தலைவர்கள்?

அப்பக்கம் ஒரு பிரமண ஜெயலலிதா திராவிட கழக பிரிவின் தலைவரான கொடுமை எல்லாம் நடந்தது, அன்றே பெரியார் பூமி நாசமானது. ஆனால் யாரும் சொல்லவில்லை

கலைஞர் இருக்கும்வரை ஒருமாதிரி இழுத்துகொண்டு சென்றார், இப்பொழுது யாருமில்லை

பெரியாரின் வாரிசாக அண்ணா, ராமசந்திரன் , ஜெயா , பன்னீர், பழனிச்சாமி, சசிகலா, தினகரன் என்றொரு பக்கம்

Image may contain: 5 people, people smiling

அண்ணா, கலைஞர் , ஸ்டாலின் உதயநிதி என இன்னொரு பக்கம்

வைகோ எனும் கட்டுபாட்டை இழந்த லாரி ஒருபக்கம்

தமிழக ஆளும்கட்சியினை ஒருநாளும் பகைக்க விரும்பா ஜால்ரா வீரமணி ஒருபக்கம்

பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல பெரியாரிஸ்டுகள், தலைவர்கள்?

ஒருவருமில்லை

பெரியாரின் இன்றைய தொடர்ச்சி யார் தெரியுமா?

இப்பக்கம் உதயநிதி அப்பக்கம் பழனிச்சாமி

பின் எங்கிருந்து நிற்கும் சித்தாந்தம்? நிச்சயம் நிலைக்காது

திராவிடம் எனும் பெயரில் ஒருவித பிழைப்புவாதம் செய்து, அச்சிந்தாந்தையே நாசமாக்கிவிட்டார்கள்

கேரளாவில் கூட பிணராயி விஜயன் போல வந்துவிட்டார்கள், இங்கு அப்படி யாருமில்லை

திராவிட அரசியலே இங்கு பெரியார் கொள்கை தாங்கிய நல்ல தலைவர் வராமல் பார்த்துகொண்டது

இங்கு இன்னும் பெரியாரிஸ்டுகள் உண்டு, அருண்மொழி போல அருமையான பெரியாரிஸ்டு உண்டு, ஆனால் எக்கட்சியில் சேர்ப்பார்கள்? எல்லாம் சுயநலம்

இன்று உதயநிதி இடத்திற்கு அவரை போல கொள்கையாளர்தான் வரவேண்டும்? விடுவார்களா?

அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்பதெல்லாம் மண்கோட்டையினை கட்டிவைத்துகொண்டு கனவு காணும் விஷயங்கள்

பாஜகவினை எதிர்கும் அளவு அது இரும்பு கோட்டையோ, நல்ல திராவிட‌ தளபதிகளோ தலைவனோ இல்லை

ஆச்சரியமாக தமிழகத்தில் பாஜகவிற்கும் நல்ல முகங்கள் இல்லை, அப்படி மிக சரியான முகத்தை நிறுத்தினால் இங்கும் நிச்சயம் மாற்றம் நிகழும்