குஷ்பூ பற்றி திருநாவுக்கரசர்

Image may contain: 2 people, text

இந்த திருநாவுக்கரசர் என்பவரின் பேட்டி கள் குடித்து, பெத்தடின் ஊசி போட்ட குரங்கிற்கு தேள்கடித்த நிலையில் என்ன செய்யுமோ அப்படியே இருக்கின்றது

அவர் திருநாவுக்கரசரா? இல்லை தெருநாய்க்கு அரசரா?

தமிழக காங்கிரஸ் தலமையில் மாற்றம் ஏற்படும் என்றார் குஷ்பு, அதற்கு சில லூசுகள் அப்படி பேசலாம் என ஒருமாதிரி மந்தி போல் உளறியிருக்கின்றார் இந்த தெருநாவுக்கரசர்

இந்த தெருநாக்கிற்கு கொஞ்சமேனும் காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி தெரியுமா? இல்லை அதன் தன்மைதான் புரியுமா?

காங்கிரஸ் மாநில தலமை ஒருநாளும் நிலையானதல்ல, மாதம் இரு தலைவர்களை அது கண்ட காட்சி எல்லாம் உண்டு. அக்கட்சி தொண்டர்களில் பாதி முன்னாள் தலைவர்கள்தான்

இப்பொழுது ராகுல் நாடாளுமன்ற தெர்தலை நோக்கி செல்கின்றார், பல மாற்றங்களை செய்கின்றார் அப்படி ஒருமாற்றம் தமிழகத்தில் வரும் என கட்சியில் செய்தி வந்தது

அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்புவும் அதனை சொன்னார், கட்சியின் செய்திகளை சொல்லத்தான் அவருக்கு பொறுப்பே கொடுக்கபட்டிருக்கின்றது. அவரை சாடினால் எப்படி?

யார் லூசு?

இதற்கு இந்த தெருநாவுக்கு கோபம் வருகின்றதாம்

என்ன தைரியம்? எவ்வளவு இறுமாப்பு?

யார் இந்த தெருநாவு?

ஜெயலலிதாவால் ஓட அடிக்கபட்டு, பின் தனிகட்சி போணியாகமல் திமுக தவிர எல்லா கட்சிகளையும் சுற்றிவிட்டு இறுதியாக பாஜகவில் ஐக்கியமானார்

இன்று தமிழிசை இருக்க வேண்டிய இடம் அவருடையது, ஆனால் காங்கிரசில் சேர்ந்தார்

அதிமுக நடராஜனும் இவரும் முன்னாள் சிநேகிதர்கள், வைகோவும்ம் திமுகவும் போல பின்னாளில் ரகசிய உறவு இருந்தது

அதிமுக கூட்டணியினை ஏற்படுத்துவேன் என்றுதான் இந்த தெருநாவு தலைவரானார்.

இப்பொழுது அதிமுக இல்லை, சசிகலா சிறையில் , நடராஜன் இல்லை

பழனிச்சாமியோடு இனி கழுதை கூட கூட்டு வைக்காது என பல கோணங்களில் சிந்தித்த காங்கிரஸ் தெருநாவினை தெருவில் போக சொல்கின்றது

ஆனால் இது தெரியாமல் எங்கள் தங்க தலைவியினை லூசு என மறைமுகமாக திட்டுகின்றாராம்

ஏன் சங்கத்திற்கு திட்ட தெரியாதா? சும்மா விடுமா?

பொன்மன தலைவியின் புன்னகை எங்களை கட்டிபோட்டிருக்கின்றது, சங்கத்தின் கைகள் கட்டபட்டிருக்கின்றன‌. இல்லாவிட்டால் நடந்திருப்பதே வேறு

எனினும் இந்த தெருநாவு மன்னிப்பு கேட்டே தீரவேண்டும்.

இம்மாதிரி குழப்பவாதிகளை, பெண்களை மதிக்க தெரியா பதர்களை, சுத்த அறிவு கெட்ட இறுமாப்பு பிடித்த அயோக்கியர்களை கட்சியில் வைத்திருப்பதே தவறு , அதுவும் தலைவராக வைத்திருப்பது மாபெரும் அவமானம்

ராகுல் காந்தி இந்த ஒட்டுண்ணியினை உடனே கட்சியினை விட்டு விரட்ட வேண்டும்

இல்லாவிட்டால் சத்திய மூர்த்தி பவன் முதல் பல இடங்களில் கழிவறைக்கு தெருநாவுக்கரசர் பெயர் சூட்டபடும்

அப்படியே கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும் அவர் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கபடும்

தலைவி மாஸ், தெருநாய்க்கரசர் லூஸ்