நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர்

Image may contain: one or more people, people standing and outdoor

நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர்

அதனால் ஒருவிஷயத்தை எம்மால் உறுதியாக சொல்முடியும், இங்கு திமுக எழுச்சிக்கு பின் தேசபற்று என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது

அரசியலுக்காகவும், வோட்டுக்காகவும் இங்கு நாட்டுபற்று குறைந்து சிறு பிரச்சினைகளும் இந்திய தமிழருக்கு எதிரி என்ற அளவில் பெரிதாக்கபட்டன‌

இதில் பத்திரிகைகளின் பங்கும் அதிகம்

இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈழஎதிர்ப்பு, காவேரி என பல இடங்களில் விஸ்வரூபமானது

மாநில அரசின் எல்லைகள் உண்டு, எது மாநில அரசின் எல்லை என்பதை இங்குள்ள கட்சிகள் சொல்லவே இல்லை. மாநில முதல்வர் பதவி என்பது ஏதோ அமெரிக்க அதிபர் பதவி என்பது போல வோட்டுக்காய் பிம்பம் வளர்த்தார்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதனை கிழிப்போம், வானத்தை வளைப்போம், செவ்வாய்கிரகத்தில் தமிழ் வளர்ப்போம் என்றெல்லாம் முழங்கினார்கள்

இவர்களின் போலிமுகம் தேசிய பிரச்சினை , அடுத்தநாட்டு பிரச்சினைகளில் நன்றாக தெரிந்தது, இவர்கள் அதிகாரம் இவ்வளவுதானா என பல இடங்களில் அழிந்த பின்பே தெரிந்தது

காவேரி காய்ந்து கிடக்கும்பொழுது உள்நாட்டில் இவர்கள் சக்தி தெரிகின்றது

இவர்களின் வறட்டு கோஷத்தை நம்பி பலர் ஏமாந்தனர், அவர்களில் புலிகள் முக்கியமானவர்கள்

ஒருகாலமும் திராவிட சித்தாந்தம் நம்மை கைவிடாது, எந்த எல்லைக்கும் போகலாம் என புலிகள் துணிந்தது அதனாலே

இந்த போலிகள் வாக்குக்காக செய்யும் அழிச்சாட்டியங்களை எல்லாம் புலிகளும் பிரபாகரனும் உண்மையான கொள்கையாளர் என நினைத்தனர்

விளைவு தமிழகம் அவர்களின் ஏகபோக கோட்டையாயிற்று, பத்மநாபாவினை கொன்று அதை உறுதிபடுத்தினர்

இந்திய ராணுவத்துடனே அசால்ட்டாக மோதினர்

இந்திய ராணுவவீரரின் உடல்கள் இலங்கையிலிருந்து சடலமாக வரும்பொழுது, காயம்பட்ட புலிகள் இதே தமிழக மதுரையில் சிகிச்சை பெற்றனர்

உலகில் எந்த நாட்டிலும் நடக்கா அவமானமிது, ஆப்கனில் உயிரிழந்த அமெரிக்க வீரனின் உடல் அமெரிக்கா வரும்பொழுது,தாலிபன் போராளிக்கு பிலடெல்பியாவில் சிகிச்சை என்றால் எப்படி இருக்கும்

அந்த அவமானம் இங்கு நடந்தது, புலிகளுக்கு இதில்தான் மாபெரும் ஆனந்தம் வந்தது, நம்பிக்கை வந்தது

தாங்கள் தமிழரின் காவலர்கள் என காட்ட இந்த தேசதுரோக செயலை கொஞ்சமும் நாணமின்றி, வெட்கமின்றி வோட்டு அரசியலுக்காக தமிழகத்தில் அனுமதித்து நின்றனர் இந்த திராவிட கட்சிகள்

பாம்புக்கு பால்வார்க்கின்றோம் என இவர்களும் நினைக்கவில்லை, மண்குதிரையினை நம்பி சவால் எடுக்கின்றோம் என புலிகளும் கருதவில்லை

ஈழ அழிவு இதில்தான் தொடங்கிற்று

ராஜிவினை சென்னையிலும், டெல்லியில் அவர் வீட்டு அருகிலுமே குறிவைக்கும் அளவு கொடூரமாக புலிகள் மாறினர், சென்னையில் வீழ்த்தினர்

அதன்பின்புதான் போலி திராவிட அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள இடைவெளி அவர்களுக்கு புரிந்தது.

இந்திய அரசு என்றால் என்ன என்பதும், தமிழக கட்சிகள் ஒருநாளும் இந்தியாவினை கட்டுபடுத்தாது என்பது பின்னர்தான் புலிகளுக்கு தெரிந்தது

ஆயினும் தங்கள் தன்மானத்திற்காக யுத்தத்தை தொடர்ந்தனர்

இந்தியா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை எனும்பொழுதுதான் இந்த திராவிட இம்சைகள் எலலம் போலி என புரிந்தது

அப்பொழுதாவது யுத்தம் நிறுத்தியோ, சரணடைந்தோ மாபெரும் அழிவினை புலிகள் தடுத்திருக்கலாம்

வாய்ப்புகள் நிரம்ப வந்தன‌

உங்கள் பிடிவாதம் ஜெயிக்காது, முடிவுக்கு வாருங்கள் என உலகம் எச்சரித்தபொழுதும் அவர்கள் வரவில்லை

ராஜிவ் கொலைக்கு அடுத்து அவர்கள் பெற்ற 11 கப்பல்களும் அமெரிக்க உதவியால் கடலில் மூழ்கடிக்கபட்டபொழுதுதான் அவர்களுக்கு உலக அரசியலே புரிந்தது

ஆயினும் புலிகளின் வறட்டு கவுரவம் அவர்களை ஆயுதத்தை விட சொல்லவில்லை, தமிழகமும் அதன் கட்சிகளும் காக்கும் என நினைத்தார்கள்

அதுவும் வைகோ போன்றவர்கள் கடைசிபுலி சாகும் வரை பொய்யான நம்பிக்கை கொடுத்துகொண்டே இருந்தார்கள்

இங்கோ யாரும் அசைவதாக தெரியவில்லை, புலிகளை ஆதரித்து 1991ல் 1 இடத்திற்கு சென்ற கலைஞர் கனிமொழி மூலம் சில நடவடிக்கைகளுக்கு ஆய்வு செய்துவிட்டு இனி புலிகள் தேறமாட்டார்கள் என ஒதுங்கிகொண்டார்

ஜெயலலிதாவோ பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்ற அளவில் உறுதியாய் இருந்தார்

இங்கு எல்லோரும் இந்தியரே, வாக்கு அரசியலுக்கானது திராவிட கோஷம் என்பது புலிகளுக்கு தெரிந்தபொழுது எல்லாம் மீறி முள்ளிவாய்க்காலும் முடிந்தது

முள்ளிவாய்க்காலுக்கு முதல் காரணம் திராவிட தமிழகம் தன்னை கைவிடாது என புலிகள் செய்த படுபயங்கர செயல்களும் அதற்கு இங்குள்ள சில போலி திராவிடர், இந்திய எதிர்ப்பாளர்கள் கொடுத்த ஆதரவுமே ஆகும்

இரண்டாம் காரணம் புலிகளின் அத்துமீறிய அதிபயங்கரவாதம்

முள்ளிவாய்க்காலில் மக்களை காக்கும்பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கருதவில்லை. இது மக்களுக்கான போர் அவர்களும் சாகவேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தனர்

எல்லாம் அழிந்தது

இப்படியாக இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி தமிழகத்தை இந்திய தேசிய அரசியலில் இருந்து பிரித்து ஒருமாதிரி அரசியல் செய்து இங்கு அழிந்தது ஏராளம்

காவேரி முதல் முள்ளிவாய்க்கால் வரை எங்கும் அழிவு

இதனை உணராத பதர்கள் மறுபடியும் மே 17 என கொடிபிடித்து திரிகின்றன‌

முன் ஏர் சென்ற வழி பின் ஏர் என்பார்கள். திராவிட கட்சிகளின் அதே வெறுப்பில் இப்பொழுது தமிழ் தேசிய இம்சைகளும் சென்றால் விளைச்சல் அதே தான், ஒன்றுமில்லை

இங்கு தேசபற்றை வளர்க்க செய்ய வேண்டியது சென்னை மெரீனாவில் அமைதிபடை வந்து இறங்கிய இடம் உண்டு

அந்த படையினை வரவேற்று கை குலுக்க்க மாட்டேன் என தன் கைகளை கருப்பு துண்டுக்குள் மறைத்து கோபாலபுரத்தில் அமர்ந்தார் கலைஞர்

அது மாபெரும் அநீதி, இம்மாநில முதல்வர் அப்படி சொல்லி இருக்க கூடாது, அப்படி சொல்லும் நபர் தேசியகொடியினை ஏற்றும் தகுதியினை இழக்கின்றார்

அந்த அமைதிபடை ஈழத்தில் அன்று முள்ளிவாய்க்கால் ஏற்படாமல் போராடிய படை, அதுவும் புலிகளும் பிரேமதாசவும் செய்த கூட்டு தாக்குதலில் 1500 வீரர்களை இழந்து வந்த படை

அந்த இடத்தில் அந்த மாவீரர்களுக்கு ஒரு நினைவு தூண் கட்டவேண்டும்

இந்த மே 17 வரகூடாது என அன்றே உயிர்நீத்த அவர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும்

சொன்னால் மாபெரும் மானக்கேடு

ஆம் அந்நியநாடான இலங்கை அந்த இந்திய வீரர்களுக்கு நினைவுதூண் கட்டி வருடா வருடம் வணங்குகின்றது

(மோடி இலங்கை விஜயத்தின்பொழுது தேடி சென்று அந்த தூணில் வணங்கினார், ஒரு இந்தியனாக அந்த மோடியினை கட்டி தழுவி வணங்கலாம்.)

இந்த சொந்தநாட்டில் அவர்களுக்கொரு செங்கல் கூட இல்லை

காரணம் திராவிட கட்சிகள் ஆக்கிவைத்திருக்கும் பிம்பம் அப்படி

பிராமணன் என்பார்கள், ஆரியன் என்பார்கள், இப்பொழுது இந்துத்வா என படம்காட்ட தொடங்கிவிட்டார்கள்

இபபடித்தான் இந்திய தேசியத்திலிருந்து தமிழகத்தை ஒருமாதிரி பிரித்துவந்து இன்று சுடுகாடாய் ஆக்கி, அந்நிய நாட்டையும் அழித்து நிற்கின்றார்கள்

இந்நிலை எல்லாம் தகர்க்கபட்டு சென்னை மெரீனாவில் அந்த மாவீரர்களுக்கு நினைவுதூண் கட்டபட்டு அதில் அஞ்சலி செலுத்தபட வேண்டும்

இனியாவது நாட்டுபற்றும் தேசிய உணர்வும் தமிழகத்தில் வளரட்டும்