திருநாவுக்கரசு சும்மா இருக்கமாட்டார் போல
இந்த தெருநாவுக்கு அரசு சும்மா இருக்கமாட்டார் போல
இவர் தங்க தலைவியினை எச்சரிக்கின்றாராம், எப்படி சினிமா நடிப்பு இங்கு எடுபடாதாம்
ஏம்பா தெருநாய்க்கு அரசா?
உமக்கு தேவை என்றால் நடிகனும் நடிகையும் புரட்சி தலைவர்கள், தேவை இல்லை என்றால் நடிகையா? எவ்வளவு அயோக்கியதனம் இது?
ராமசந்திரன் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார் , அங்கும் நடித்தார், கூட இருந்து நடித்தது நீர்
ஜெயாவும் அப்படியே நடித்தார், அங்கும் நடித்தவர் நீர், பின் உமது ஓவர் நடிப்பால் ஜெயாவிற்கே எரிச்சல் வந்து விரட்டபட்டீர்
பின் உமது தனிகட்சி நடிப்பும் சரியாக வரவில்லை
பாஜகவிலும் உமது நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை
என்ன சொன்னீர் குஷ்பு சினிமாவில் நடித்தாரா?
“அக்னி பார்வை” என்றொரு படத்தில் நீரும் நடித்தீர் நினைவிருக்கின்றதா, பறந்து பறந்தெல்லாம் சண்டை போட்டீர்
படம் படுதோல்வி அதன் பின் கவுரவவேடத்தில் கூட உம்மை கூப்பிட யாருமில்லை, சின்னதிரையில் கூட கூப்பிட யாருமில்லாமல் பாஜக சென்றுவிட்டு இப்பொழுது இங்கு வந்திருக்கின்றீர்
குஷ்பு நடிகை என்றால் நீர் யார்? நீரும் நடிகரே
ஆனால் குஷ்பு சினிமாவில் வெற்றிபெற்றுவிட்டு அரசியலில் வெற்றிபெற வந்திருப்பவர்
நீரோ அரசியலில் தோற்று, சினிமாவிலும் தோற்று தெருவோடு திரிபவர், அந்த கோபம்தானே உமக்கு
வீணாக தலைவியினை எச்சரிக்க வேண்டாம், அவர் அகில இந்திய செய்தி தொடர்பாளர் அவருக்கு கட்சி செய்தி சொல்ல தகுதி உண்டு
“எங்க தலைவி சொல்லுவார், இன்னமும் சொல்வார், கெத்தா தைரியமா சொல்வார்யா
பொறுக்கமுடியலண்ணா ராஜினாமா செய்துவிட்டு ஓடும்”
இந்த எச்சரிக்கை மிரட்டல் எல்லாம் விட்டுகொண்டிருந்தால் அதிமுக, பாஜகவில் இருந்து விரட்டபட்டது போல் ஓட விரட்டபடுவீர்
மீறி சொல்லிகொண்டிருந்தால் சங்கம் காங்கிரஸ் கட்சியில் இணையும், அதன் பின் அதுவே உம்மை ஓடவிரட்டும்
காங்கிரஸில் சேர்ந்து சத்யமூர்த்திபவனில் கால்வைத்து அந்த காற்றை சுவாசித்தாலே வேட்டிகிழிக்கும் சண்டை வெறி வந்துவிடும் ஜாக்கிரதை, அப்படி ஏகபட்ட வரலாறு உள்ள இடம் இது
அப்பொழுது உமது உடை இருக்குமா இல்லையா பற்றி சங்கம் ஒன்றும் சொல்லமுடியாது
நீர் ஒரு நடிகன் என்பதை நீர் மறந்திருக்கலாம், நாங்கள் மறக்கவில்லை
நீ தலைவியினை நடிகை என சொல்ல என்ன யோக்கியதை இருக்கின்றது? அதுவும் இரு நடிகர்களின் கட்சியில் இருந்துவந்து இங்கே குதிக்க என்ன அருகதை இருக்கின்றது
உமக்கு என்ன அச்சம்?
ஜெயலலிதா போல் தலைவி வளர்ந்துவிடுவார் எனும் அச்சமன்றி வேறன்ன?
அவர் ஜெயலலிதாவினை விட அபாரமான தலைவியாக வருவார், இது சத்தியம்
சங்கம் விடாது, கடைசியாக உம்மை எச்சரிக்கின்றோம், வார்த்தைகளை வாபஸ்பெற்றுவிட்டு சத்தியமூர்த்தி பவனை விட்டு ஓடிவிடவும்
(தலைவி இந்த இம்சைகளுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் லண்டன் சுற்றுபயணத்தில் இருக்கின்றார்
அவர் வந்து அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி உத்தரவிடும் வரை சங்கம் தெருநாவுக்கு அரசரை கண்டித்து கொண்டே இருக்கும்)