ஜெருசலேம் விவகாரத்தில் ஜோர்டான் மன்னர் யோசனை
ஜெருசலேம் விவகாரத்தில் உருப்படியான யோசனை சொல்லியிருக்கின்றார் ஜோர்டான் மன்னர்
அதாவது ஜெருசலேம் எனும் நகர முன்பு ஜோர்டானிடம் இருந்தது, பின்பு பாலஸ்தீனம் ஜோர்டானுக்கு பொதுவாக இருந்தது
பின்பு இஸ்ரேலுக்கு கொஞ்சம் உரிமை வழங்கபட்டது, அதுவும் மேற்கு ஜெருசலேமில், கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனுக்கானது
இதை ஐநா முதல் எல்லோரும் முன்பு ஒப்புகொண்டார்கள், பின் எதையுமே முதலில் ஏற்று பின்னர் சொதப்பி எதிராளிமேல் பழிபோடும் கில்லாடியான இஸ்ரேல் முழு ஜெருசலேமினையும் பிடித்துவிட்டு இங்கு எல்லாம் கலவரம் கட்டுபடுத்த வேறுவழியில்லை என சொல்லிகொண்டது
ஆனாலும் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் பகுதி என்பதை அராபத்சொல்லிகொண்டே இருந்தார், தன் கல்லறை கூட அங்கு அமையவேண்டும் என்றார்
இப்பொழுது அவர் உடல் தற்காலிகமாக ரமல்லாவில் புதைக்கபட்டிருக்கின்றது
இப்பொழுது அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாறியாயிற்று, ஆங்காங்கு இருக்கும் சிறிய நாடுகளுக்கு பணம் கொடுத்து இஸ்ரேல் அங்கு தூதரகம் திறக்க வைக்கின்றது
இன்று கவுதமலா நாட்டின் தூதரகம் திறக்கபடுகின்றதாம், எண்ணிக்கை இன்னும் கூடும்
இப்படிபட்ட நிலையில் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் பகுதி என்பதையே உலகிற்கு இஸ்ரேல் மறைத்துவிட்ட செய்தியினை ஜோர்டான் மன்னர் அட்டகாசமாக சொல்கின்றார்
மேற்கு ஜெருசேலம் இஸ்ரேல் பக்கம் போகட்டும், புராதனமிக்க கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் தலைநகராகட்டும் என சொல்லிவிட்டார்
இவரின் பேச்சுக்கு ஆதரவு பெருகுகின்றது, கனடா பிரதமர் வரை வாழ்த்துகின்றார். ஐரோப்பிய யூனியனும் யோசிக்கின்றது
ஒரே பேட்டியில் உலகபுகழ்பெற்று விட்டார் ஜோர்டான் மன்னர், மிக சரியான நியாயத்தை சரியான நேரத்தில் செய்திருக்கின்றார்
அதாவது டெல் அவிவிலிருந்து மேற்கு ஜெருசலேமிற்கு இஸ்ரேலிய தலைநகர் மாற்றபட்டது சரி என்றால், ரமல்லாவில் இருந்து கிழக்கு ஜெருசலேமிற்கு பாலஸ்தீன் நகர் மாற்றபடுவதுதான் சரி
ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் சண்டை சமரசம் எல்லாம் உண்டு, ஆனால் ஓரளவு இஸ்ரேலின் அடாவடிதனத்தை அவர் எதிர்த்துகொண்டுதான் இருக்கின்றார்
ரமலான் நோன்பு தொடங்கிய இந்நாளில் ஜோர்டான் மன்னரின் துணிச்சலான பேச்சு உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றது