கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை

கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை வந்துவிட்டது, முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்காக சென்றப்பொழுது கூட மக்களை சந்திக்காத அவர் இப்பொழுது ஓடி ஒடி சந்திக்கின்றார்

அவர் கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தை தொடங்கினாராம், அங்கிருந்து பணகுடி எல்லாம் வந்து ராமசந்திரன் ஸ்டைலில் போஸ் கொடுத்திருக்கின்றார், தமிழகம் இப்படி இருக்கின்றதா? என கவுதம புத்தர் போல் ஆச்சரியம் எல்லாம் பட்டிருக்கின்றார்

அடுத்து வள்ளியூர் வருவார் என அவரின் மய்யத்து பாய்ஸ் காத்திருக்க அவரோ நைசாக உவரி பக்கம் ஓடிவிட்டாராம்

இது கமலுக்கு கொடுக்கபட்ட குழப்பமான வரைபடம் என வள்ளியூர் மய்யங்கள் சமாதானம் சொல்லிகொண்டிருக்கின்றன‌

உண்மை என்னவென்றால் கமலுக்கும் வள்ளியூருக்கும் கொஞ்சம் பொருத்தம் சரியில்லை, வள்ளியூர் மய்யத்தின் அய்யத்திற்குரிய ஊர் ஆகிவிட்டது

அவர் சில சர்ச்சை விஷயங்களை சொன்னார் என்பதற்காக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கபட்டது, அதுவும் பல முறை

அடுத்து இவரின் மக்கள் நீதி மய்யம் என்பது லோக் ஆயுக்தா எனபடும் மக்கள் நீதி மன்றத்தின் தமிழ்பெயர் என்பதால் அதை தடைசெய்யவேண்டும் என்றும் வள்ளியூரின் தினகரன் அணி வழக்கறிஞர் வழக்கெல்லாம் தொடுத்திருந்தார்

இது கமலுக்கு மறக்குமா என்ன?

வள்ளியூரை அவர் தவிர்த்த மர்மம் இதுதான் என்கின்றார்கள்

ஆக மய்யத்து கமலஹாசனை முதன் முதலில் ஓட விரட்டிய ஊர் எனும் பெருமையினை வள்ளியூர் பெற்று சரித்திர சாதனை படைத்தாயிற்று

ஒரு சிறிய டவுணான வள்ளியூரையே சமாளிக்க பயப்படும் கமலஹாசன் எப்படி அரசியலில் தாக்குபிடிக்க போகின்றாரோ??