கல்வி வளர்த்த தமிழகத்தில் திராவிட ஆட்சி வந்தபின் கல்வி விற்பனை

Image may contain: 1 person, smiling, text


காமராஜர் எவ்வளவோ கல்விசாலைகளை திறந்தார், அவர் குடும்பத்தாருக்கு இன்று சொந்தமாக பள்ளி கல்லூரி உண்டா?

ஆங்கில வழி கல்வி நிறுவணம் உண்டா?

காமராஜரின் வம்சாவழிகள் எத்தனை கல்விநிலையங்களை நடத்துகின்றார்கள்?, ராஜாஜி குடும்பம் எவ்வளவு பள்ளிகளை நடத்துகின்றது என கேட்டால் நாம் திராவிட விரோதி 


இந்த “உபி பிளஸ் டூ தேர்வில் பலர் தோல்வி, தமிழக பிளஸ்டூவில் பலர் தேர்ச்சி” இச்செய்தி கேள்விபட்டவுடன் மரத்தடியில் கட்டைபீடி குடித்துகொண்டிருந்தவன் எல்லாம் ஏ திராவிட சாதனை பாரீர் என குதிக்க ஆரம்பித்தாயிற்று

உபி சூழலுக்கும் தமிழக சூழலையும் ஒப்பிட்டால் கால்பந்தில் பிரேசிலையும் இந்தியாவினையும் ஆடவிட்டது போன்ற கொடுமை அது, ஒப்பிடவே முடியாது

இங்கு நவீன கல்விமுறை 17ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிற்று, தொடங்கி வைத்தவன் வெள்ளையன், அவன் நிர்வாகத்திற்கான கல்வியினை போதித்தான்

1857 கலரங்களுக்கு பின் இந்தியா பிரிட்டன் அரசிடம் சென்றபின் இங்கு கல்வி முறை சீர்படுத்தபட்டு சில சலுகைகள் வழங்கபட்டன‌

அதை மிஷெனெரிகள் பயன்படுத்தி ஏராளமான கல்வி நிலையங்களை அமைத்தனர், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அமைத்தனர்

இவர்கள் இங்கே காலூன்றிய அளவு வடக்கே செல்லவில்லை, அதற்கு அப்பகுதியில் இருந்த கலாச்சார மாறுபாடு, தொலைவான பகுதி என ஏராளமான விஷயங்கள்

இதனால் மிஷினரிகள் தெற்கேதான் கல்வி நிலையம் அதிகம் தொடங்கினர் , அவர்களை பார்த்து இந்து அமைப்புகளும், செட்டியார்களும் கல்வி நிலையங்களை தொடங்க ஆரம்பித்தனர்

அன்றே படித்தவர்கள் தாழ்ந்த சாதியிலும் இங்கு இருந்தனர் நீதிகட்சி பிரமுகர்கள் எல்லாம் அன்றே படித்தவர்கள், பன்னீர் செல்வம் என வழக்கறிஞர் கூட இருந்தார்கள். அப்பொழுது திராவிட சித்தாந்தம் கூட இல்லை

அன்றே அரசுபணியில் பிராமணர் அல்லாதவருக்கு இடம் வேண்டும் என ரெட்டி , நாயர், செட்டி, நாடார் கேட்கும் அளவிற்கு படித்தவர்கள் இருந்திருக்கின்றார்கள், பிராமணர் அல்லாதார் சங்கம் அப்படித்தான் உருவாகி இருக்கின்றது

அதாவது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வரும்பொழுதே இங்கு கல்வி மாற்றம் ஏற்பட்டிருந்தது,

அண்ணா அக்காலத்திலே எம்.ஏ படிக்கும் அளவு பச்சையப்பா கல்லூரி இருந்தது

கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு போட்டியாக இந்துக்களும் கல்லூரி எல்லாம் அமைத்து கல்வி கொடுத்திருக்கின்றனர், ஏகபட்ட வள்ளல்கள் அன்றே இருந்திருக்கின்றனர்

(வைகோ படித்த கல்லூரி, வலம்புரிஜாண் படித்தகல்லூரி, மாறன் குடும்பம் பயின்ற லயோலா கல்லூரி எல்லாம் கலைஞர் பிறக்கும் முன்பே, திராவிட குரல் எழும் முன்பே தொடங்கபட்டு நடந்து வருபவை

திராவிட சிங்கங்கள் எல்லாம் யாரோ தொடங்கி வைத்த பள்ளி கல்லூரியில் படித்து வந்தவையே.)

பின் சுதந்திரம் அடைந்து இந்திய அதிகாரம் வந்தபொழுது ராஜாஜி சில விஷயங்களை சொன்னார், இன்றும் வெளிநாட்டில் காலை முதல் மதியம் 1 மணிவரைதாள் பள்ளி

காரணம் மாணவர்கள் சோர்ந்துவிடுவார்கள் என்றும் , அது கல்வியில் வெறுப்பினை ஏற்படுத்தும் என்றும் பல காரணங்கள்

இன்று உலகம் இயங்கும் இந்த முறையினை அன்று கொண்டுவர முயன்றார் ராஜாஜி, இது குலகல்வி என பொங்கி அவரை விரட்டினார்கள்

அதன்பின் காமராஜர் வந்தார், மதிய உணவுதிட்டம் எல்லாம் கொண்டுவந்து கல்வியினை வளர்த்தார். அடிமட்ட மக்கள் வரை படிக்கவேண்டும் என அவர் ஆசைபட்டார், கிட்டதட்ட 10 ஆயிரம் பள்ளி திறந்தார்

அவர் போட்ட அடித்தளத்தில்தான் பின் திமுக பயணித்தது, பின் என்ன ஆனது?

கொஞ்சம் கொஞ்சமாக கல்வியினை தனியார்மயம் ஆக்கினார்கள், தனியார் என்றால் யார்?

இவர்களும் இவர்கள் பினாமிகளும்

இன்று எல்கேஜிக்கு 1 லட்சம் எனும் நிலையினை சாட்சாத் இவர்கள்தான் உருவாக்கினார்கள்

ராஜாஜியினை குலகல்வி என்றார்கள், காமராஜரை விரட்டினார்கள்

இன்று திராவிட கட்சி கட்சியினருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கல்வி நிலையம் இருக்கின்றது

ஆக இவர்கள் செய்த சாதனை என்ன?

அரசு நடத்தவேண்டிய கல்வி நிலையங்களை சாதுர்யமாக தனியார் ஆக்கி, அதில் இவர்கள் புகுந்து சம்பாதித்துகொண்டே கல்வி வழங்குகின்றனர்

இதில் அரசுபள்ளிகள் கிட்டதட்ட 8000 பள்ளி மூடபட போகின்றனவாம்

தமிழை காப்போம் என கிளம்பியவர்கள் தமிழையும் காக்கவில்லை, தமிழ் பள்ளிகளையும் காக்கவில்லை, எல்லாம் இப்பொழுது தனியார் ஆங்கிலமய கல்வி

எப்படிபட்ட மோசடி? எப்படிபட்ட சீரழிவு?

இலவசமாக கிடைக்கவேண்டிய கல்வியினை , காமராஜரும் ராஜாஜியும் இலவசமாக கொடுக்க நினைத்த கல்வியினை, வெள்ளையன் இலவசமாக கொடுத்த கல்வியினை மிக தந்திரமாக தனியாருக்கு மாற்றி அதில் இவர்கள் புகுந்து சம்பாதித்தனர்

இலவசமாக கொடுக்க வேண்டிய கல்வியினை மக்களை பல லட்சம் கொடுத்தால் மட்டுமே பெறமுடியும் என்ற சூழலை உருவாக்கிவிட்டு, வட இந்தியாவினை விட திராவிடம் கிழித்தது, உபி விட திராவிடம் சாதித்தது, ஆப்கனை விட நாங்கள் வளர்ந்துவிட்டோம் என சொல்லி கொள்வது

இதை சொல்ல வெட்கபட வேண்டுமேயன்றி பெருமைபட கூடாது

ஆனால் கொஞ்சமும் வெட்கமே இன்றி தன் பிள்ளைக்கு எல்,கேஜியில் சில ஆயிரம் பள்ளியில் பல ஆயிரம், கல்லூரியில் ஏகபட்ட லட்சங்களை செலவழித்துவிட்டு திராவிட சாதனை பாரீர் என சொல்லி கொண்டிருப்பவனுக்கு அறிவுமில்லை, வெட்கமுமில்லை.

அக்கால கல்வி நிறுவணங்கள் நல்ல தலைவர்களை உருவாக்கியது, ஏராளமான சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் வந்தார்கள்

காரணம் அந்த கல்லூரிகளும் பள்ளிகளும் நல்ல நோக்கங்களுக்காய் நடந்தன‌

இன்றுள்ள கல்வி நிலையங்களும் வியாபாரம், அதிலிருந்து வரும் மாணவர்களுக்கும் முழுக்க வியாபார சிந்தனை, முழு சுயநல சிந்தனை

அப்படி கல்விக்கான எல்லா தகுதியும் இன்னும் ஏராள பெருமைகளையும் அழித்துவிட்டு ஏதோ சாதனை போல பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதில் நிச்சயம் வழிகாட்டி ராமசந்திரன் எனும் சனியன். 1974 வரை திமுக ஆட்சி ஓரளவு நன்றாய் இருந்தது

இந்த ராமசந்திரன் வந்தே நாசபடுத்தினார் இந்த ஜேப்பியார், ஐசரி வேலன், பச்சைமுத்து எல்லாம் அவரால் வந்தவர்கள்

பின்னாளைய திமுகவும் அதே பாதைக்கு சென்றாயிற்று, அதை சரி செய்ய விரும்பவில்லை

மருத்துவத்திலும் இதே நிலை

அமெரிக்க அதிபர் புஷ், அரசு மருத்துவமனையில் காலமானார், மகாதீர் முமகது தன் ஆட்சியில் கட்டபட்ட மருத்துவமனையில் இதய சிகிச்சை செய்தார்

இங்கோ அப்பல்லோ, காவேரி, குளோபல் என வளரவிட்டு பணம் படைத்த அரசியல்வாதிகள் அங்கே குவிகின்றனர்

பகுத்தறிவில் தமிழகம் வளர்ந்து மருத்துதுறையில் முன்னணியில் நிற்கின்றது, இது பெரியாரின் சாதனை என சொன்ன வீரமணி அப்பல்லோவில் மல்லாக்க கிடக்கின்றார்

இதை எல்லாம் ஆழ கவனியுங்கள், இவர்கள் ஒரு புல்லும் புடுங்கவில்லை, திராவிடம் பிராமண எதிர்ப்பு என்றபெயரில் மக்கள் மேல் கல்வி, மருத்துவ சுமைகளை பல லட்சம் ஏற்றி வைத்திருக்கின்றார்கள், அதில் அவர்கள் கணிசமாக சம்பாதித்து விட்டார்கள், இன்னமும் சம்பாதிகக் துடிகின்றார்கள் என்பது புரியும்

வெள்ளையன் ஏகபட்ட கல்லூரிகளை கட்டினான் விட்டுவிட்டு சென்றான்

பச்சையப்பா, அழகப்பா, அண்ணாமலை என ஏகபட்ட தமிழர்கள் கல்விக்காய் அன்றே சொந்த காசில் சாலைகள் அமைத்தனர்

இன்னும் ஏராளமான தமிழர் அள்ளிகொடுத்து கல்வி வளர்த்தனர், காமராஜர் கல்விக்காக‌ பிச்சையே எடுத்தார்

அப்படி கல்வி வளர்த்த தமிழகத்தில் திராவிட ஆட்சி வந்தபின் கல்வி விற்று கல்விதந்தைகள் உருவாயினர், ஏகபட்ட கல்வி வியாபார நிறுவணங்கள் உருவாகி கட்டாய வசூல் செய்கின்றன‌

அக்கால் செட்டிகளும், மிஷினரிகளும் , காமராஜரும் கோமாளிகள். இந்த திராவிட அலப்பறை மட்டும் அறிவுள்ளவர்கள், எல்லாம் பிழைப்பு வாதம், சுரண்டல், எல்லாம் ஏமாற்றுதனம்.

ஒரு நாகரீக சமுதாயம் எப்படி வீழ்ந்திருக்கின்றது என்றால் இப்படித்தான்

இதைசொன்னால் நாம் ஆரிய அடிவருடி, ஆர்.எஸ்.எஸ், பார்பானிய அடிமை