ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது
ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது, இதுதான் தீர்ப்பு இதனை அரசு இதழில் உடனடியாக அச்சிட்டு ஆகவேண்டியதை பாருங்கள் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம்
இனி மேலாண்மை குழு அமைக்கும் விஷயம் நடைபெற வேண்டும், ஒழுங்காக நீர் பகிரபட வேண்டும்
இதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகும், முதலாவது நல்ல மழைபெய்யும் நேரத்தில் வெள்ள கணக்கை எல்லாம் நாங்கள் திறந்துவிட்ட நீர் என கன்னடம் கணக்கு காட்டும்
இன்னொன்று வறண்ட காலத்தில் எப்படி பங்கிடபோகின்றார்கள் என்பது
இதெல்லாம் நிபுணர்கள் பிரச்சினை பார்த்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது
இது இன்று கன்னடத்தில் அணல் வீசும் முடிவுதான், அவர்கள் எடியூரப்பா சிக்கலை பார்த்துகொண்டிருக்க, வாட்டாள் நாகராஜும் டெப்பாசிட் போன அதிர்ச்சியில் இருப்பதால் இதனை இன்னும் கண்டுகொள்ளவில்லை
இனி இப்பக்கம் வரகூடாது என நீதிமன்றம் சொல்லியிருப்பதால் கலைஞர் 1970களில் தொடுத்த வழக்கு, அவர் 1989ல் அமைத்த நடுவர்மன்ற தீர்ப்பினை போலவே இன்று முடிந்திருக்கின்றது
இனி தமிழகத்தில் காவேரி அரசியல் செய்யமுடியாது, மத்திய அரசு தமிழரை காவேரியில் வஞ்சிக்கின்றது போன்ற குரல்கள் கேட்காது
இப்பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்
அக்கும்பல் ஒருமாதிரி காமெடி ரகம், காவேரியினை மீட்ட சோழன் பழனிச்சாமி, காவேரியினை ஓடவிட்ட அகத்திய முனிவன் பன்னீர்செல்வம் என நிச்சயம் வருவார்கள்
கலைஞரும் ஜெயலலிதாவும் கொண்டுவராத காவேரியினை நாங்கள் கொண்டுவந்தோம் என கொஞ்சமும் வெட்கமின்றி சொல்வார்கள்
அதை எப்படி எதிர்கொள்வது என்றுதான் தமிழகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது