பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பண்ருட்டி ராமசந்திரன் வாய்திறக்காமல் இருக்க காரணம் என்ன?

Image may contain: 1 person

ஈழபிம்பம் உடைய வேண்டுமானால் இங்கு செய்ய வேண்டியது பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் பகிரங்க பேட்டிகளை வழங்க வேண்டும்

ஆனால் வழங்கமாட்டார், அடித்து சொல்லலாம் அவர் வாயே திறக்கமாட்டார்

ஈழத்தின் எதிரி கலைஞர் என்ற கருத்து இங்கு நிலைநிறுத்தபடுவதில் பண்ருட்டியாருக்கு ஏக சந்தோஷம்

காரணம் திமுகவில் இருந்தபொழுதே பண்ருட்டிக்கும் கலைஞருக்கும் ஆகாது

பண்ருட்டியார் அப்பொழுதே பொறியியல் படித்தவர், சிறந்த ராஜ தந்திரி

ஆனால் கட்சியின் உள்ளடி வேலைகளால் அவரை நம்பதகாதவர் பட்டியலில் வைத்தார் கருணாநிதி

பின்னாளில் ராமசந்திரனோடு பண்ருட்டி சென்று அமைச்சர் ஆனபொழுது , ஒருநாளும் பண்ருட்டியினை நம்பாதே என கலைஞர் தனி செய்தி அனுப்பும் அளவு பண்ருட்டி மீது கலைஞருக்கு கோபம் இருந்தது

தான் திமுகவில் பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டியவன் கலைஞர் கெடுத்தார், அதிமுகவிலும் தன் மீது சந்தேக விதைகளை அவர் தூவினார் என்பதில் என்றுமே பண்ருட்டிக்கு கோபம் உண்டு

தேமுதிகவிலிருந்தும் பண்ருட்டி வெளியேற்றபட்டதற்கு திமுகவின் சில நகர்வுகள் உண்டு என்பார்கள்

பண்ருட்டி தன் அரசியல் எதிரி என்ற எண்ணம் கருணாநிதிக்கு எக்காலமும் இருந்தது, அது பண்ருட்டிக்கும் புரிந்தது

அந்த கோபத்தைத்தான் எல்லோரும் கலைஞர் ஈழம் கொன்றவர் என்று தூற்றும்பொழுதும் இன்னும் இல்லாத பொய்களை எல்லாம் சொல்லும்பொழுதும் மனதில் ரசித்துகொண்டு நகர்கின்றார்

இது ஒன்றுதான் அவர் வாய்திறக்காமல் இருக்க காரணம்

இல்லை என்றால் அவர் போன்றவர்கள் பேசினால் ஒரே நாளில் பிரபாகரன் பிம்பம் நொறுங்கும், கலைஞர் செய்த பல முயற்சிகள் பற்றி பேச வேண்டி வரும், புலிகள் பிம்பம் நொறூங்கி சரியும்

அப்படி நொறுங்கினால் கலைஞர் தெய்வம் ஆவார், அதற்கு வழிவிடுவாரா பண்ருட்டி

ஒருநாளும் விடமாட்டார்

அந்த டெல்லி சம்பவங்களை தன் நெஞ்ச்சோடே வைத்து அவர் சுமந்து திரிய இதுதான் காரணம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications