கன்னட மக்களுக்கு வாழ்த்துக்கள்

அமித்ஷா அழுதுகொண்டிருக்கின்றார், மோடி முணுமுணுத்து கொண்டிருக்கின்றார், இன்னும் பலர் அறையினை பூட்டி அழுதுகொண்டிருக்கின்றார்கள்
நிச்சயம் இது அவர்களுக்கு மாபெரும் அவமானம்
தேர்தலில் பெரும்பான்மை இல்லை எனினும் ஓடோடி சென்று நின்றார்கள், பெரும் சர்ச்சைகிடையே பெரும்பான்மைதானே நாங்கள் காட்டிவிடுவோம் என்று வந்தார்கள்
நிச்சயம் முடிவு தெரிந்திருக்கும், ஆனால் ஏன் வந்து நின்று கன்னத்தில் அறை வாங்கினார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி
சாம, பேத, தான, தண்டம் எல்லாம் செய்து பார்த்துவிட்டு இப்பொழுது முடியாமல் நடையினை கட்டுகின்றார்கள்
சில திட்டங்களை செயல்படுத்த பார்த்திருகின்றார்கள், ஆனால் எதிர்தரப்பு கொஞ்சமும் அசையவில்லை
நிச்சயம் தேர்தலில் தோற்றதை விட இதுதான் பெரிய தோல்வி, ஊர்பார்க்க மாபெரும் தோல்வியினை கண்டிருகின்றார்கள்
இனியாவது அடக்கி வாசிக்கட்டும், ஆளுநர் அவர்கள் அணியாக இருக்கலாம் , அதிகாரம் இருக்கலாம் ஆனால் நாட்டில் இன்னும் நியாயம் நேர்மை செத்துவிடவில்லை என்பது இந்த சம்பவம் மூலம் தெரிவதால் மிக்க மகிழ்ச்சி
கன்னட மக்களுக்கு வாழ்த்துக்கள்
குமாரசாமி இனி காங்கிரஸ் கிடுக்குபிடியில் ஆட்சி செய்வார், ஆக காங்கிரஸ் தன் ஆட்சியினை தக்க வைத்துகொண்டது
எனினும் தேவகவுடா குடும்பம் ஒரு மாதிரி என்பதால் காங்கிரஸ் பின்னாளில் கவிழ்த்துவிடவும் வாய்ப்பு உண்டு, அப்படி கவிழ்ந்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் ஆச்சரியமில்லை
காங்கிரஸ் பிரியங்காவினை அழைத்து பிரச்சாரத்தை தீவிரபடுத்தினால் நிச்சயம் இச்சிக்கல் வந்திருக்காது என்கின்றது இன்னொரு கணிப்பு
எப்படியோ காங்கிரஸ் இங்கு வீழவில்லை என்பதும், தெற்கே பாஜகவின் அட்டகாசம் செல்லாது என்பதும் நிரூபிக்கபட்டாயிற்று
இனி குமாரசாமி ஆட்சியில் காவேரி நீர் தீர்ப்புபடி வரவேண்டும்
எடியூரப்பா அதற்கு செய்யாதே இடையூறப்பா..
((கன்னட கட்சிகள் மிக பொறுப்பாக இருகின்றன, மிக நுட்பமாக செயல்படுகின்றன
இங்கோ ஜெயா இல்லை, சசிகலாவின் இரும்பு பிடி இல்லை , கொஞ்சம் அடித்தால் ஆட்சியினை கலைக்கலாம் அல்லது அமைக்கலாம்
இல்லை ஆட்சி முக்கியமில்லை எதிரியினை வீழ்த்துவதுதான் முக்கியம் என காங்கிரஸ் குமாரசாமிக்கு வழிகாட்டியது போல் தினகரன் கோஷ்டிக்காவது வழிவிடலாம்
ஆயிரம் வழிகள் திமுக முன் இருக்கின்றது.
ஆனால் அதற்கெல்லாம் திமுக தயாராக இல்லை. நியாயம் நீதி, புறவாசல் என பேசிகொண்டே இருக்கின்றார்கள். நிச்சயம் உருப்படமாட்டார்கள்.
இன்று தமிழகம் சீரழிவதில் அதிமுகவினை விட திமுகவிற்கே பங்கு அதிகம், இதை சொல்ல தயக்கம் ஏதுமில்லை.)