ராஜிவ் நிச்சயம் தமிழகத்து ரட்சகர்
தமிழ்நாட்டில் 27 ஆண்டுகளாக ஒரு பெரும் கொடுமை நடக்கின்றது, மாபெரும் நன்றிகெட்டதனம் நடக்கின்றது
இதில் திமுக அதிமுக என இரண்டிற்குமே தந்திரம் உண்டு, சில அரசியல் கணக்கும் உண்டு. மிக சிரமபட்டு தந்திரமாய் அதை மறைப்பார்கள் அல்லது நகர்வார்கள்
புலிகளும் இந்திய எதிரிகளும் , காங்கிரஸ் எதிர்களும் இங்குள்ள தமிழுணர்வாளர்களை தூண்டிவிட்டு அந்த இடம் மக்கள் மனதில் வராதவாறு பார்த்துகொள்வார்கள்
ஆம், நேருவின் பேரனும் இந்திராவின் மகனும் இத்தேசத்தின் கென்னடியாக துணிச்சலாக இருந்த ராஜிவ் தமிழகத்தில்தான் கொல்லபட்டார், திருபெரும்புதூரில் கொல்லபட்டார்
அவர் உடலின் ரத்தமெல்லாம் ஒரு துளி மிஞ்சமால் அங்குதான் சிந்தபட்டது
ஆனால் கலைஞர், ஜெயா என பெரும் தலைகள் என்றாவது அங்கு அஞ்சலி செலுத்த யாரும் கண்டோமா? இல்லை ஒருகாலும் இல்லை
ராஜிவ் கொல்லபட்ட நாள், தீவிரவாத எதிர்ப்பு நாள் என்பதால் , அவர்கள் முதல்வராக இருந்த காலங்களில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்
காரணம் அது அவர்களை பொறுத்தவரை மறைக்கபட வேண்டியது, அதை கிளறினால் ராஜிவ் நினைவுக்கு வருவார் மக்கள் அனுதாபம் காங்கிரஸ்பால் திரும்பும் என ஏக அரசியல் கணக்குகள்
இதனாலே அங்கு செல்லமாட்டார்கள், நழுவுவார்கள். அந்த தியாக பூங்கா இங்கு இருப்பதே தெரியா வகையில் நடப்பார்கள், சிலர் ஈழம் என கத்துவதை சில இடங்களில் ரசிப்பார்கள்
இதில் ஜெயா மிக மிக நன்றிகெட்ட அரசியல்வாதி, நிச்சயம் ராஜிவ் கொலையே அவரை ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் ஒரு நாளும் அவர் அங்கு அஞ்சலி செலுத்தியதில்லை
இதுபற்றி நேரடியாக கேட்டபொழுது அவர் என்ன சொன்னார் ” நான் ஏன் செல்ல வேண்டும்? சென்னைக்கு வரும் டெல்லி காங்கிரசார் அண்ணா சமாதிக்கு செல்வார்களா?”
ஜெயா என்பவர் எப்படி ஒரு நன்றிகெட்ட ஜென்மம் என்பதற்கு இதைவிட ஆதாரமில்லை, இவ்வளவிற்கு ஜெயாவினை அரசியலில் கைதூக்கிவிட்டதே இந்திராவும், ராஜிவுமே
இப்படி காட்டிய நன்றியால்தான் பின்னாளில் நன்றிகுரியவர் யாருமின்றி அனாதையாக செத்தார் ஜெயா
கலைஞர் இதில் வித்தியாசம், அவருக்கு திருப்பெரும்புதூர் செல்ல மனம் ஒப்பவில்லை. காரணம் புலிகளை அவ்வளவு நம்பினார் அவர். அதாவது பத்மநாபா கொலையிலே சிவராசனை தப்பிக்கவிட்டது கலைஞர் அரசு சந்தேகமில்லை
ஆனால் அதே சிவராசன் திரும்ப வந்து ராஜிவினை கொன்றான். இந்த வலி கலைஞருக்கு என்றும் உண்டு அவர் மனதின் தீராவலி, சோனியாவினையும், ராகுலையும் கலைஞர் இறுதிவரை ஒருவித குற்ற உணர்வோடு ஆதரித்தது இதனால்தான்
இதனால் அவரும் அப்பக்கம் செல்லவில்லை
ஆழ கவனியுங்கள், 2009ல் அந்த அரைநாள் உண்ணாவிரதத்திற்கு அவர் அங்குதான் சென்றிருக்க வேண்டும், அர்த்தமும் அரசியல் செய்தி சொல்லும் இடமும் அதுவே
அப்பொழுது கூட அந்த இடத்தை மறைத்த சாமர்த்தியசாலி கலைஞர்.
இந்நிலை இனி மாறவேண்டும். இந்த தேசத்தின் தலைவன் செத்த இடத்தில் இனி இங்கு கவர்னரும் முதல்வரும் செல்ல வேண்டும்
இந்த கவர்னர் அதை செய்யலாம், கட்சி அபிமானங்களை தாண்டி ராஜிவ் நினைவாலயம் அவர் செல்லலாம்
அய்யா பழனிச்சாமி, நிச்சயம் நீர் அடுத்தமுறை வரப்போவதில்லை ஆனால் ராஜிவ் நினைவிடம் சென்று இந்தியனாக அஞ்சலி செலுத்தினால் நிச்சயம் இதுவரை இல்லா புது முதல்வரை தமிழகம் காணும்
அந்த பிராய்லர் கோழிக்கு பீனிக்ஸ் என மண்டபம் கட்டும் பாவத்தில் பங்கு ஓரளவு குறையும்
உங்கள் மேல் எல்லோருக்கும் அபிமானம் கூடும், அதை செய்வீர்கள் என நம்புகின்றோம்
கட்சி அபிமானங்களை தாண்டி, அரசியலை தாண்டி தமிழகம் காக்க, தமிழக அமைதி காக்க தன்னையே தியாகமாக அந்த உத்தம தலைவன் உயிர்கொடுத்த இடத்தில் இனியாவது அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கட்டும்
அதே வளாகத்தில் அமைதிபடை வீரர்களுக்கு ஒரு நினைவு தூண் அமையட்டும்
அந்த தியாக தலைவனால் காக்கபட்ட தமிழகம் அவனுக்குரிய மரியாதையினை இனி செலுத்தட்டும்
என்ன சொல்லுங்கள், இந்தியாவில் ஒரு குடும்பம் தன் உறுப்பினர்களை இழந்து தேசியம் காத்தது என்றால் இந்திராவினையும், ராஜிவினையும் இழந்த அக்குடும்பம் போல் யாருமில்லை
இயேசு சொல்வது போல “அடுத்தவருக்காக தன்னையே இழப்பது போல் பேரன்பு வேறில்லை”
இந்திரா பஞ்சாபை மீட்க தன் உயிரை கொடுத்தார்,
ராஜிவ் தமிழககத்தை மீட்க தன் உயிரினை கொடுத்தார். ஆம் சிங்கள விஜயதமுனியிடம் தன் உயிரை காப்பாற்றிகொண்ட ராஜிவ் பின் தனுவினை வலிய அழைத்து மாலை வாங்கி செத்து தமிழகத்தை காப்பாற்றினார்
அதில் வந்த அமைதியில் கலைஞரும், ஜெயாவும் ஆண்டார்களே தவிர அம்மனிதனுகுரிய அஞ்சலியினை செலுத்தவில்லை
உலகின் மிக மிக அசிங்கமான அரசியல் இது
போகட்டும், இனியாவது தமிழகம் திருந்தட்டும். பழனிச்சாமி அதனை செய்வார், இல்லாவிட்டால் தமிழிசை தைரியமாக செய்வார் என எதிர்பார்ப்போம்
ராஜிவ் நிச்சயம் தமிழகத்து ரட்சகர்.
