800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம்
800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம்
இது யார்காலத்தில் திறந்த பள்ளிகள் என்றால் காமராஜர் காலத்தில் திறக்கபட்டவை, தமிழ்வழி பள்ளிகள்
திராவிடம் காக்க வந்த கட்சிகள் ஊரெல்லாம் ஆங்கிலபள்ளியினை திறந்து தாங்களும் தங்கள் கட்சியும் கல்லாகட்ட புறப்பட்டபின் இப்பள்ளிகள் வீழ்ச்சி அடைந்து இப்பொழுது மூடபடுகின்றன
மிக நுட்பமாக கல்வியினை தனியார்மயம் ஆக்கிவிட்டார்கள்
இனி மீதமிருக்கும் தமிழ்பள்ளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மூடபட்டு தனியார் ஆங்கில பள்ளியே இனி எஞ்சியிருக்கும்
தமிழும் செத்து, தமிழ்பள்ளிகளும் செத்தாயிற்று
ஏதும் கேட்டால் உனக்கு திராவிட சிந்தனை தெரியாது, ஆங்கில பள்ளிகளை நாங்கள் திறக்காவிட்டால் இந்தி பள்ளிகளை திறந்து தமிழை அழித்திருப்பார்கள் என்பார்கள்
ஆளாளுக்கு ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள், அது சரி என அவர்களே நம்பியும் கொள்வார்கள்
விளக்கம் ஆயிரம் இருக்கலாம், ஆனால் காட்சி இதோ கண்முன்னே தெரிகின்றது
இத்தனை ஆயிரம் ஆங்கிலபள்ளிகளுக்கு அனுமதி கொடுக்காமல் இருந்தால் இப்பள்ளிகள் தரம் உயர்த்தபட்டு நிலைத்திருக்கும்
செய்திருக்கலாம்? செய்யமாட்டார்கள், செய்தால் எப்படி கல்வியில் சம்பாதிப்பது? தேர்தலில் செலவழிப்பது?