ஸ்டெர்லைட் வரலாறு என்ன?
கலைஞர் முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என கத்திய பயல் எவனையும் தூத்துகுடி பக்கம் காணவில்லை
இங்கெல்லாம் வரமாட்டான், காரணம் கொன்றது பழனிச்சாமி அரசு என்பதால் மெழுகு பிடிக்க, நினைவேந்த ஒரு பயலும் இல்லை
ஆனால் ஈழம் என்றால் வருவார்கள், காரணம் இந்திய எதிர்ப்பு
ஸ்டெர்லைட் வரலாறு என்ன?
இங்கு அதனை வரவேற்றவர் ஜெயலலிதா, ஆனால் சில கட்டுபாடுகளை விதித்தார்
பின்னாளைய திமுக அரசு அதனை தளர்த்தியது, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் நாயகன் ஆ.ராசா, சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபொழுது ஸ்பெக்ட்ரம் பல நூறு டன் அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதி வழங்கபட்டது
கலைஞரின் முரட்டு பக்தரான தூத்துகுடி பெரியசாமி ஸ்பெக்ட்ரம் ஆலையின் அங்கீகரிக்கபடா பங்காளியாகவே இருந்தார், இன்றும் அவர் குடும்பம் அப்படித்தான்
அப்படி தூத்துகுடியில் எப்படி தாதுமணல் வைகுண்டராஜனை திமுகவும், அதிமுகவும் சேர்ந்து வளர்த்ததோ அப்படி ஸ்டெர்லைட்டையும் இருவரும் சேர்ந்தே தாலாட்டி வளர்த்தார்கள்
இப்பொழுது பழனிச்சாமி அரசும் அந்த ஸ்டெர்லைட் உற்பத்தியினை சில ஆயிரம் டன்னாக உயர்த்த அனுமதி அளித்து அதற்கு ஆதரவாய் சுட்டும் கொன்றாகிவிட்டது
கூட்டி கழித்து பார்த்தால் ஒரு பயலும் சரி இல்லை
நேற்றைய போராட்ட பலி சொல்வதென்ன? நல்ல தலைவன் இல்லை, தலைவன் இல்லா ஆடுகளை சுட்டு கொன்றிருக்கின்றார்கள்
அந்த புள்ளியில் இருந்து யோசித்தால் தெரியும், நல்ல தலைவன் என இன்றைக்கு யாருமில்லை. அதுதான் இவ்வளவு அழிவிற்கும் காரணம்
திமுகவும் அதிமுகவும் நிச்சயம் ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் என்றோ, வெளி சொல்ல செல்லுமென்றோ கனவு காண வேண்டாம். நாடகம் ஆடுவார்களே தவிர செயலுக்கு வரமாட்டார்கள்
தமிழகம் நேரடியாக இனி தேசிய கட்சிகளுக்குள் அடைக்கலம் புகுவது நல்லது, இல்லாவிடில் இந்த அழிவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்
(திமுக அதிமுக ஸ்டெர்லைட்டை வளர்த்தது, வைகுண்ட ராஜனை வளர்த்தது என்பதால் அவர்களுக்கு என்ன இலாபம்? என கேள்வி வரலாம்
என்ன லாபமா?
வோட்டுக்கு 5 ஆயிரம் வரை அள்ளி வீசுகின்றார்களே, அது எங்கிருந்து வருகின்றது? இப்படித்தான் வருகின்றது)