பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இங்கு பாஜக ஏன் வளரவில்லை?

Image may contain: 4 people, people standing and text

சவுதி பாலைவனத்தில் நெல் விளைந்தால் கூட, பாகிஸ்தானே திருந்தினால் கூட, ஏன் ராமராஜன் கட்சி தொடங்கி ஆட்சி பிடித்தால் கூட தமிழகத்தில் பாஜக வளராது

இங்கு பாஜக ஏன் வளரவில்லை?

வளர வாய்ப்பு அறவே இல்லை என்பதை காணும் அரிய வாய்ப்பு வாய்த்திருக்கின்றது

நடந்திருப்பது அரச பயங்கரவாதம், அப்பட்டமான படுகொலை. உலகமே ஒருமாதிரி முறைத்துகொண்டும் கண்ணீர்விட்டுகொண்டும் இருக்கின்றது

அந்த இறுக்கமான சூழலில் அந்த 12 பேரும் ஏன் துப்பாக்கி சுடும்பொழுது குறுக்கே வந்தார்கள் என பேசிகொண்டிருந்தால் என்ன சொல்வது?

இவர்களை பார்த்தால் என்ன தோன்றும்? அடித்து விரட்ட தோன்றுமா , இல்லை அவர்களும் பரவாயில்லை வாய்ப்பு கொடுக்கலாம் என தோன்றுமா?

நிச்சயம் அடித்து விரட்டி ஆந்திர எல்லையில் கொண்டுவிடத்தான் தோன்றும்

நிச்சயமாக துப்பாக்கி சூடு கொடுங்கொலையினை நியாயபடுத்த வேண்டிய சூழல் பன்னீர், பழனிச்சாமி பரிவாரங்களுக்குத்தான் உண்டு

இவர்கள் ஏன் குதிக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியம்

ஆக தாங்கள் தமிழகத்தை ஆள்வதாக மறைமுகமாக சொல்கின்றார்கள், எங்கள் ஆட்சி இப்படித்தான் என ஆதரிக்கின்றார்கள்

இனி பாஜக ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு வரும்?

இப்படியே இருந்தால் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்கு என்ன? குடிதண்ணீர் கூட கிடைக்காது

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications