பதவி விலகட்டும் இல்லை ஸ்டெர்லைட்டை மூடட்டும்
இவ்வளவு நடந்தபின்னும் ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிடமாட்டோம் என பழனிச்சாமி அடம்பிடிப்பது நல்லதல்ல
இது கொத்தாய் சாவோம், மனித வெடிகுண்டாய் வெடிப்போம் என சொல்லிகொண்டிருக்கும் வெறிகும்பலுக்கு வாய்பாகும்
பாதிக்கபட்ட மக்கள் மனம் நொடியில் திசைமாறும், அதுவும் இளவயதினர் உணர்ச்சிவசபட்டால் பேரழிவு நிகழும்
இங்கு தமிழக அரசை தமிழர்களே பொங்கி எழுந்து அடித்துவிரட்டட்டும் எனும் நுட்பம் டெல்லியால் அரங்கேற்றபடுகின்றது
அக்காலத்தில் இருந்தே இப்படித்தான் எனினும் ராமு,ஜெயா தன் வோட்டு வங்கியாலும், கலைஞர் தன் சாதுர்யத்தாலும் அவற்றை தவிர்த்து வந்தனர்
பழனிச்சாமிக்கு இந்த அறிவெல்லாம் இல்லை, வீணாக டெல்லி சொல்கேட்டு அந்த தந்திர ஆட்டத்திற்கு துணைசென்றால் இங்கு நடக்க இருக்கும் பெரும் சிக்கல்களை தவிர்க்க முடியாது
ஒன்று பதவி விலகட்டும் இல்லை ஸ்டெர்லைட்டை மூடட்டும்
இரண்டுமல்லாது இப்படித்தான் இருப்போம் என்றால் வரப்போகும் சிக்கல்கள் ஏராளம்
பாதிக்கபடபோவது பொதுமக்கள் என்பதாலும், பலன்பெற போவது விஷ கும்பல் என்பதாலும் பழனிச்சாமி பலமுறை யோசிப்பது நன்று
டெல்லி தமிழக அரசை தமிழரே பொங்கி எழுந்து அடிக்கட்டும் என விட்டுகொண்டிருக்கும் தந்திரம் சாமன்யம் அல்ல
பழனிச்சாமியினை பிடித்து அமர வைத்திருப்பது அதற்குத்தான்
அது புரியாமல் பல்லிளிக்கின்றார் பழனிச்சாமி