பிரியாணி போலவே சுவையானது நோன்பு கஞ்சி
பிரியாணி போலவே சுவையானது நோன்பு கஞ்சி, சமைக்க வெண்டிய முறையில் சமைத்தால் அந்த சுவைக்க்கு ஈடே இல்லை
இந்த கஞ்சிக்காகவே நாள் முழுவதும் விரதம் இருக்கலாம்
எதையுமே அரசியலாக்கும் தமிழகம் முன்பு இந்த நோன்பு கஞ்சியினையும் அரசியல் செய்தது.
அதாவது நோன்புதிறப்பு நிகழ்வில் முன்பெல்லாம் தமிழக அரசியல் தலைகள் தென்படும். கலைஞர் பங்கெடுப்பார், அது நாத்திக கட்சி ஆயிற்றே, மத விழாக்களில் வரலாமா என்றால் வோட்டு அரசியலில் எல்லாம் சாத்தியம்
வந்து சும்மாவா இருப்பார்? முகமது நபியின் பெருமைகளை சொல்வார், தமிழக முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லீம்களுக்கே தான் காவல் என்பது போல பேசி அசத்திவிட்டு செல்வார்
கலைஞர் செய்தால் ஜெயா விடுவாரா? அவருக்கு பிடித்தமான பச்சை கலர் வேறு இஸ்லாமிய அடையாளம், இதனால் பச்சை ஆடை அணிந்து பச்சை நிற மேடையில் அமர்ந்து கஞ்சி குடிப்பார்
அவரை தவிர எல்லோரும் அவரை புகழ்வார்கள், ரசித்துகொண்டே குடிப்பார்
விஜயகாந்த் முன்பு அடிக்கடி இந்த நோன்பு திறப்பில் கலந்துகொள்வார் இப்போது காணவில்லை
கலைஞர், ஜெயா எல்லாம் கலந்து கொண்ட நோன்பு திறப்பில் இந்த பன்னீரும், பழனிச்சாமியும் கலந்துகொள்வார்களா என்றால் இன்னும் இல்லை
ஒருவேளை அவர்களை அழைத்து கஞ்சி ஊற்றினால் அல்லா மன்னிக்கவே மாட்டான், நோன்பு இருப்பதே அர்த்தமின்றி ஆகிவிடும் என சம்பந்தபட்ட தரப்புக்கு அச்சம் இருக்கலாம்