கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான்
கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான்
“மக்களே இந்த தூத்துகுடி சில தனியார் முதலாளிகள்கிட்ட சிக்கி இருக்கு, எனக்கு ஆதரவு தாங்க, சுத்தமான தூத்துகுடியா, ஆபத்தில்லா தூத்துகுடியா மாற்றி காட்டுறேன்”
அன்றே அவர் அலுவகத்தில் சென்னையில் கல்வீசபட்டது, கொலை மிரட்டல் எல்லாம் வந்தது.
சாதி கலவரத்தை தூண்டுகின்றார் என பலர் குதித்தார்கள்
ஸ்டெர்லைட் மட்டுமல்ல, தூத்துகுடியினை பாதிக்கும் பல விஷயங்களை குறிப்பாக “சக்கரவர்த்தி” வைகுண்ட ராஜனை பகிரங்கமாக குற்றம் சாட்டியாவர் விஜயகாந்த்
ஆனாலும் அஞ்சாமல் நின்றார் அந்த விஜயகாந்த், தேர்தலில் தோற்றும் போனார்
இந்த போராட்டத்தில் ஒருவரை தூத்துகுடி ஏறெடுத்து பார்க்க முடியாத குற்ற உணர்வோடு இருக்குமென்றால் அது விஜயகாந்த் எனும் ஒருவரையே
மற்றவர்களை தூக்கி போட்டு மிதிக்க அதற்கு உரிமை இருக்கின்றது