காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறி விட்டார்கள்

ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கு மகா முக்கிய காரணம் தளபதிகள் சமாதான காலத்தில் சுகவாழ்விற்கு பழகிவிட்ட்டார்கள், இன்னொன்று நாமே நிரந்தரம் என்ற இறுமாப்பில் இருந்தார்கள்

பிரபாகரனால் அவர்களை அடக்க முடியவில்லை, மனம்போன போக்கில் இருந்த அவர்கள் பிரபாகரனுக்கு மாபெரும் தோல்வியினையும் சாவையும் கொடுத்தார்கள்

இதெல்லாம் இப்பொழுது ஏன் என்றால், திமுக நடத்தும் சமீபத்திய போராட்டங்களை பாருங்கள், ஒன்றும் பிரமாதமில்லை

காரணம் மாவட்ட செயலாளர்கள் நிரந்தர பதவி என்பதால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்ன பெரிய கட்சிதலமை? நம்மை விட்டால் யார் உண்டு?

காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறிவிட்டார்கள்

கட்சி தொண்டனிடத்திலும் சோர்வு தெரிகின்றது, இது பெரும் பின்னடைவினை கொண்டு வருகின்றது

முன்பு நடந்த தேர்தலிகளில் பல தேர்தலில் திமுக வெற்றியினை தவர விட இதுதான் காரணம்

அதிமுக என்பது நாடக கம்பெனி, ஆனால் ஜெயா ஆட்டி வைத்திருந்தார், சசிகலா தவிர கட்சியில் யாரும் நிரந்தரமில்லை. சோம்பலோ இல்லை இனி எனக்கு என்ன? என யாராவது மல்லாந்து கிடந்தாலோ நெஞ்சிலே மிதி விழுந்தது

திமுகவில் அதெல்லாம் சுத்தமாக இல்லை

அதிமுக தொண்டன் எப்பொழுது எம்.எல்.ஏ ஆவான், மாவட்ட செயலாளர் ஆவான், அமைச்சர் ஆவான் என்பதெல்லாம் ஜெயா காலத்தில் அவனுக்கே தெரியாது

ஒரே அமாவாசையில் யாரோ அமைச்சராவான், அமைச்சர் கட்சி விட்டே விரட்டபட்டிருப்பார்

இதனால் கட்சிக்குள் பயமும் இருந்தது, எதிர்பார்ப்பும் இருந்தது

திமுக இந்த விஷயத்தில் மகா மோசம், எல்லா மாவட்ட செயலாளரும் முடி மன்னர்கள் போல, அரபு சுல்தான்கள் போல நிரந்தரம்

திமுக இந்த மாவட்ட செயலாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, தொண்டர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தால் தவிர அதுவும் உருப்படாது, அது நடத்தும் போராட்டமும் உருப்படாது