மிஸ்டர் ராகுல், என்ன அரசியல்வாதி நீர்? ஒரு திருமணம் கூட செய்யாவிட்டால் எப்படி?  

Image may contain: 2 people, people smiling

நேருவின் வாரிசுகளாக அறிபடுபவர்களில் ராகுல்காந்தி முக்கியமானவர்

நிச்சயம் வருண் காந்திக்கு ஒரு எதிர்காலம் இருந்தது, ஆனால் மேனகாவின் சில தவறுகள் வருணை பாஜக முகாமில் முடக்கி அவரின் ஜாதகத்தை மாற்றிவிட்டன‌

உண்மையில் சஞ்சய்,இந்திரா என கொடூர சாவுகளை பார்த்த மேனகா அஞ்சி ஒதுங்கினார் என்பதே உண்மை

சோனியா இதில்தான் முதலில் ஒதுங்கினார், ஆனால் கட்சி அழிந்தது, நாட்டின் அறியபட்ட குடும்பமாக தலைவராய யாருமில்லை என்பதால் கட்சி தடுமாறிற்று

தன் மாமியாரும் கணவனும் ரத்தம் சிந்தி காத்த கட்சிக்கு தன் உயிரை பணயம் வைத்தே சோனியா வந்து சாவிற்கு துணிந்து கட்சியினை நிறுத்தினார். கட்சி நின்றது

இன்று ராகுல் கட்சி வாரிசாக வந்திருக்கின்றார், ஆனால் திருமணம் செய்யவில்லை

அதற்கு பல காரணங்களை சொன்னாலும், உண்மை மகா பரிதாபமானது

அதாவது இந்திய பிரதமர்கள் ஒருவித கோமாளியாக இருந்தால் (மோடி உங்கள் நினைவுக்கு வரவே கூடாது) சர்வதேச சக்திகள் கவனிக்காது, மன்மோகன் போல உற்பத்தி பிரதானம் என்றாலும் கண்டுகொள்ளாது

ஆனால் இந்திரா, ராஜிவ் போல மகா துணிச்சலானவர் என்றால் விட்டு வைக்க மாட்டார்கள், ராகுல் இந்த வழி

நிச்சயம் பிரதமராக போகும் ராகுலுக்கு ஆபத்து அதிகம், அது உயிரை பணயம் வைத்து நிற்கும் காரியம் அது

இதனால் அவருக்கு பல குழப்பங்கள் இருக்கலாம், அவரின் காயங்களும் வலிகளும் குழந்தையில் இருந்தே அதிகம்

ஆனால் நேரு இந்திரா ராஜிவின் வம்சங்கள் இப்பொழுது பிரியங்காவின் குழந்தைகளாக அடையாளம் காணபடுகின்றன‌

ராகுல் திருமணம் செய்யவேண்டும், நேருவின் நாட்டுபற்றுமிக்க வம்சம் தொடர்ந்து வரட்டும்

மிஸ்டர் ராகுல், என்ன அரசியல்வாதி நீர்?

ஒரு திருமணம் கூட செய்யாவிட்டால் எப்படி?


ராகுல் பிரதமராக மாட்டார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

இது ஆச்சரியங்களை கொடுக்கும் நாடு, தேவகவுடாவே பிரதமர் ஆன நாட்டில், அட அவ்வளவு ஏன்? மோடியே பிரதமரான இந்தியாவில் ராகுல் பிரதமராக முடியாதா

நிச்சயம் முடியும், இந்திய அரசியலில் எல்லாம் சாத்தியம். ராகுலுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு