அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன்

Image may contain: 4 people, sunglasses and close-up

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன், தூத்துகுடி கலவரத்துக்கு என்ன காரணம்னு நினைகிறீங்க?

ஸ்டெர்லைட் மூடிட்டா என்னடா பிரச்சினை, அதுதான் காரணம்

அதெல்லாம் இல்லை

நக்சலைட்?

அதுவும் இல்லை

பின் யார்டா காரணம்?

அசுத்த ஆவிகள்

டேய் ஆமாடா, ஸ்டெர்லைட்டால் காற்று மாசுபட்டுத்தான் பல நோய்கள் வருகின்றன சரிதான், அதனால் மக்கள் பொங்கிவிட்டார்கள்

அந்த ஆவி இல்லண்ணே, பொல்லாத ஆவி

அடேய் அது என்னடா?

அண்ணே இது கடைசி காலம், பாவம் பெருகிற்று. இதனால பொல்லாத ஆவிகள் எல்லாம் சேர்ந்து கலவரத்தை தூண்டி பலரை கொல்லுதுண்ணே

ஓஹோ

இதற்கு நாம் வல்லமையாய் ஜெபிக்கணும், அமைதி திரும்பும்

ஆக எங்க கலவரம் வந்தாலும் அசுத்த ஆவிதான்

கண்டிப்பாண்ணே, நாம ஜெபிக்காவிட்டால் அது பெரும் கலவரத்தை கொண்டுவந்து நாசமாக்கிரும்

அப்போ நீ போய் ஏண்டா 13 பேரை காப்பத்தல‌

அண்ணே கடவுள் விருப்படிதான் எல்லாம் நடக்கும், சோ அவங்க சாகட்டும்னு விட்டுட்டேன், ஆனா இனி யாரும் சாகமா நாம ஜெபம் பண்ணி தடுக்கணும் அல்லேலூயா

உலகெல்ல்லாம் இதே நிலவரமா? இங்கு மட்டுமா

அண்ணே முதல்ல இங்க ஜெபிப்போம் , பின் உலகத்திற்காக உபவாசம் இருந்து ஜெபிப்போம், இயேசப்பா வெற்றி கொடுப்பார், அல்லேலூயா

சரிடா இப்போ என்ன செய்யணும்

அண்ணே மோடி அரசு ஒழியணும். அதுதான் பிரச்சினை அது ஒழிய நாம ஜெபம் செய்யணும், வாங்கண்ணே வந்து ஜெபம் பண்ணுங்க.

நீ பண்ணுடா நான் அப்புறன் சேர்ந்துக்குறேன்

ஓ லார்ட் இன் ஹெவன் எங்கள் தந்தையே, அப்பா, தகப்பனே ராஜா ஸ்ஸ்ஸ் புஷ்ஷ்ஷ்ச் டிரம்ப் புட்டீன் அக்கிதோ ஜிங்க் பிங்க் டமமாம்ட் ஆககக ஹீஇஃபீ ஜோஓச்ச்ஜாஆ

அடேய் இது என்னடா?

பரலோக பாஷைன்னே உங்களுக்கு புரியாது

அத பரலோகத்துல போய் பேசுடா, இப்போ எனக்கு புரியிறமாதிரி தமிழ்ல்ல பேசு

அண்ணே மோடி அரசு ஒழியணும்னு கடுமையா ஜெபிச்சேன்

அவர விடுடா, இந்த பழனிச்சாமி அரசு ஒழிய வேண்டாமா?

அண்ணே அவரே அப்பாவிண்ணே , அந்த ஆள போட்டுகிட்டு என்னெண்ணே இருக்கு? மோடி ஓழியணும்னே வாங்க ஜெபிப்போம்

அடேய் இப்போ தமிழ்நாட்டை பிடிச்சிருக்குற அசுத்த ஆவி பழனிச்சாமிடா, அவரை விரட்டுவோம்டா

அட போங்கண்ணே, அப்பாவிய போட்டுகிட்டு. மோடி ஒழியணும் அதுக்காக நாம ஜெபிக்கணும்

அப்போ பழனிச்சாமி இருந்தா பரவால்லியா

அதுல எண்ணெண்ணெ தப்பு?

அடேய் உலகத்திலே மோசமான ஆவி உன்கிட்டதாண்டா இருக்கு, இன்னைக்கு சுடுகாட்டுக்கு கொண்டு போய் உன்ன சிலுவையில் அறையாம விட மாட்டேண்டா”