4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது அம்பானி, அதானி , அனில் அகர்வால்
4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது யாரென்றால் அம்பானி, அதானி இப்பொழுது இந்த அனில் அகர்வால் போன்ற உள்ளூர்க்காரர்கள்
இங்கு பாஜகவால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இவர்கள்தான், கூடுதலாக தமிழிசையிம் எஸ்வீ சேகரும் வரிசையில் வருவார்கள்
மற்றபடி மற்ற மக்கள் எல்லோருக்கும் அதிருப்தி, மற்ற கட்சி பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் மூத்த தலைகள் அவர்களின் கூட்டணியான சிவசேனை கூட மகிழ்ச்சியில் இல்லை
ஆனால் இந்தியாவிற்கு வெளியே எல்லோருக்கும் கடும் மகிழ்ச்சி
இவர்கள் வந்தால் யுத்தம் தொடங்குமோ என அஞ்சிய பாகிஸ்தானுக்கு, இவர்கள் ஒரு புல்லையும் புடுங்கபோவதில்லை என்பது தெரிந்து மிக்க சந்தோஷம். இல்லை என்றால் அரசியல் ஸ்திரதன்மை இல்லா பாகிஸ்தான் இப்பொது யுத்தம் என்றாலோ சிக்கல் என்றாலோ திணறும்
சீனாவிற்கு நன்றாய் பாஜக பற்றி தெரிந்ததால் அவர்களும் மகிழ்ச்சி
எங்கே நமமீது பாய்வார்களோ என அஞ்சிய இலங்கையும், ஹஹஹாஹ மோடியா? என்ற அளவிற்கு நிம்மதியாயிற்று
இன்னும் சில வெளிநாடுகளுக்கு பரவாயில்லை அவராக வருகின்றார், ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஓடிவிடுகின்றார் எப்படி ஒரு நல்ல மனிதர் என அவர்களுக்கும் மகிழ்ச்சி
இவர்களை விட மிக்க மகிழ்ச்சியில் இருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்
ஆம், டாலருக்கு எதிரான இந்திய பண மதிப்பு மிக தாழ்ந்து கிடக்கின்றது, இதனால் அவர்கள் குறைந்த வெளிநாட்டு பணம் அனுப்பினால் போதும்
ஆக மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் மகிழ்வாய் இருப்பதெல்லாம் இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்கள்தான்.