தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி

தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி, பல இடங்களை ஹெலிகாப்டரில் சுற்றுவாராம்

தூத்துகுடிக்கு வரும் எண்ணமெல்லாம் சுத்தமாக இல்லை

இனி துப்பாக்கி சூடு நடத்தவேண்டியது, இன்னும் எவனாவது ரஜினி அரசியலுக்கு வருவார் என சொல்லிகொண்டிருந்தால் அவன் மீதுதான்

இமயமலை என்ன? ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லுங்கள் ரஜினி ஆனால் காலா , எந்திரன் படங்கள் எல்லாம் இங்குதான் ரிலீசாகும், இமயமலையிலா ரிலிசாகும்

ஆகட்டும் பார்த்துகொள்ளலாம்

தனக்கும் மனசாட்சி உண்டு என்பதை நீருபிக்க தூத்துகுடியில் செத்தவர்களுக்கு 20 லட்சமாக நிதியினை உயர்த்திவிட்டார் பழனிச்சாமி, இதை தொடர்ந்து தினகரன் 3 லட்சத்தை 6 லட்சமாக உயர்த்துவாரா என்பது தெரியாது

இவ்வளவு நடந்தும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்கள் மயிரை கூட பிடுங்கமுடியாது என திமிராக பேசிவருகின்றது , அதை ஒரு அமைச்சரும் முதல்வரும் ஏன் எந்த அரசியல்வாதியுமே கண்டிக்கவில்லை என்பதுதான் பெரும் வருத்தம்

இதிலிருந்து பூரா பயலும் ஸ்டெர்லைட்டிடம் துண்டு நீட்டி மடிப்பிச்சை ஏந்தியிருப்பது தெரிகின்றது

மோடி என்பவர் இன்னும் தூத்துகுடி சம்பவம் குறித்து வாய்திறக்கவில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு அவர் கண்ணீர்விட்டது உலகறிந்தது

இதன் மூலம் தான் கொஞ்சமும் இரக்கமில்லாத, கொடுமையான இதயம் படைத்த, மகோன்னத திமிர்பிடித்த கொஞ்சமும் பெருந்தன்மையோ ஏன் மனித தன்மை கூட இல்லாதவர் என்பதை அவர் தமிழ்மக்களுக்கு தெரிவிக்கின்றார்

மிஸ்டர் மோடி, இனி இங்கு தாமரை தமிழிசையின் கூந்தலுக்குள் கூட மலராது