காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள்
காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள், பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி இருக்கின்றார்கள்
இதற்கு என்ன செய்யலாம் என்றால், எந்த ஊரில் உடைக்கபட்டதோ அந்த ஊருக்கு மின்சாரம் முதல் பஸ் வரை நிறுத்த வேண்டும், உடைத்தவன் சொத்துக்களை அரசுடமை ஆக்கிகொண்டோ இல்லை வேறு நஷ்ட ஈடுகளை பெற்றுகொண்ட பின்னோ வசதிகளை திரும்ப கொடுக்கலாம்
நிச்சயம் ஊர் கூடி செய்திருக்காது, எவனாவது சல்லிபயல் செய்திருப்பான். மின்சாரம் போக்குவரத்து என தடை செய்தால் ஊர் மக்களே அந்த சனியனை பிடித்து ஒப்படைப்பார்கள்
ஆங்காங்கே பஸ்களை உடைக்கும் கும்பல்களை இப்படித்தான் வழிக்கு கொண்டுவரவேண்டும்
காடுவெட்டி குரு என்ன அரசுபஸ் மோதியா இறந்தார்?
அரசு பஸ்களே ஓட்டை உடைசலாக, இனி உடைவதற்கு ஒன்றுமில்லை என பரிதாபமகரமாக ஓடிகொண்டிருக்கின்றது
அதன் மீது கல் எறிய வேண்டுமென்றால் இவர்கள் எப்படிபட்ட கொடூரர்களாக, இதயமே இல்லா மாபாவிகளாக இருக்க வேண்டும்
இப்போதுள்ள அரசு பஸ்ஸை பார்த்தால் கல் எறியவா மனது வரும்?