பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது

பாஜக ஆட்சியில் பாலியல் பலாத்காரம் அதிகரித்தது என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை

அதற்குள் சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து கொடூர கொலை செய்திருக்கின்றது, யானைக்கு மதம் எப்பொழுது பிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்தது

ஆக பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது

 
 


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார் : செய்தி

எதற்கு? சரியாக சுட்டார்களா? இல்லை சொதப்பினார்களா என பார்த்து மத்திய அரசுக்கு அறிக்கை தெரிவிக்கவா?

ஆனாலும் ஆளுநருக்கு ஒரு சிக்கல் உள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டை விசாரிக்க கமிஷன் அமைக்கபட உள்ளது என அவர் காயம்பட்டோரிடம் சொன்னால், அந்த நீதிபதி சந்தாணம் அறிக்கை என்ன ஆனது என ஆளுநரிடம் யாராவது கேட்டு தொலைத்தால் என்னாகும்?

அதன் பின் ஆளுநரே துப்பாக்கி சூட்டில் இறங்குவார்


தூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை நெல்லை ரயில் நிலையம் அருகில் சீமான் ஆர்ப்பாட்டம் : செய்தி

அப்படியே சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கிள் பேசிய பேச்சு நினைவுக்கு வருகின்றது

“என்னது ஆர்பாட்டம், ஊர்வலம்? எவ்வளவு காலத்துக்கு இப்படி ஏமாத்துவீங்க‌

என் இனம் சாகும்ப்பொழுது இங்கே ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என்றால் யாரை ஏமாற்ற என் அறிவார்ந்த தமிழினமே..

அதெல்லாம் சரியில்ல தம்பி, சும்மா தண்டவாளம் பக்கம் நின்னு கத்துவதற்கு நாம் என்ன இனதுரோகி திமுகவா?

நாம் மாற்று அரசியல் சக்தி, நாம் நடத்துவது புரட்சி. சும்மா இறங்கி அடிச்சா அலறணும். ஒரு ரயில் நிலைய போராட்டம்னு வைச்சிக்க. ரயிலே வர பயப்படனும்

அடிக்கிற அடியில தண்டவாளமே இருக்க கூடாது

சும்மா தண்டவாளம் பக்கம் நின்னு அழ நாம் என்ன இனதுரோகி திமுகவா? நாம் பிரபாகரனின் தம்பிகள் என் உறவே….”

 
 

 


நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு எங்களையும் அழைக்க வேண்டும் : தமிழிசை

அக்கோவ் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் உங்களை அழைக்கமாட்டார்கள் , நீங்களே பர்தா அணிந்து ரகசியமாக சென்றால்தான் உண்டு

ஏன் நீங்கள் கெஞ்ச வேண்டும்?

நீங்களே இப்தார் விருந்து ஏற்பாடு செய்து அழையுங்கள், மாபெரும் சிறப்பாக இருக்கும்

ஆனால் யார் வருவார்கள் என்றால் அங்குதான் சிக்கல்

பொன்னாரும், எச்.ராஜாவும் குல்லா போட்டுகொண்டு வருவார்கள், எஸ்வி சேகரும் அப்படி மாறுவேடத்தில் வரலாம் , வேறு யாரும் அப்பக்கம் வரவே மாட்டார்கள்

அதனால் விருப்பம் இருந்தால் இப்தார் விருந்து நடத்தி “தாமரை மலர்ந்தே தீரும்” என சொல்லிவிட்டு நீங்களே சிறபித்துகொள்ளுங்கள்