இனி இருப்பவர்களையாவது சைமன் காப்பாற்ற வேண்டாமா?
அப்பொழுது அங்கிள் சைமன் சேகுவேரா தம்பி, பெரியாரின் பேரன் என சொல்லிகொள்வார், பிரபாகரன் கணக்கில் வரவில்லை
அப்பொழுது ஒருமுறை முத்துராமலிங்க தேவர் சமாதிக்கும் வரும் வழியில் இம்மானுவேல் சேகரன் சமாதிக்கும் மாலை போட்டு வணங்கி வந்தார்
என்னய்யா இது கொன்றவனுக்கும் மாலை, செத்தவனுக்கும் மாலை என பலர் கேட்டார்கள், அங்கிள் அமைதியாக சொன்னார்
“தம்பி, இத நுட்பமா விளங்கிகிடனும், இருவருமே இந்த மண்ணின் தலைவர்கள். அன்று நான் இருந்தால் இருவரையும் அழைத்து அய்யா நாம் இருவருமே இந்த மண்ணின் பிள்ளைகள் , சமாதானமாய் போங்கள் என கைகுலுக்க வைத்திருப்பேன்
அன்று நான் இல்லை, அதனால் நடந்தது. இனி நடக்க விட மாட்டேன் என்பதுதான் என் போராட்டம்”
அதன் பின் யுவராஜ் கவுண்டரையும் தலித்துகளையும் கைகுலுக்க வைப்பார், காடுவெட்டி குருவினையும் திருமாவினையும் கைகுலுக்க வைப்பார் என்றேல்லாம் காத்திருந்தும் ஒன்றும் நடக்கவில்லை
அன்னார் இனி சமாதானத்திற்கு வரமாட்டார் என கவலை அடைந்த காடுவெட்டி குருவும் செத்துவிட்டார்
ராக்கெட் ராஜாவும் சரண்டைந்துவிட்டார், பசுபதி பாண்டியனும் செத்துவிட்டார்
இனி இருப்பவர்களையாவது சைமன் காப்பாற்ற வேண்டாமா?
அந்த சைமன் இப்பொழுது திருப்பாச்சேதிக்கு ஏன் போகவில்லை ஏன் இருவரையும் கைகுலுக்க வைக்கவில்லை என கேட்டால் தும்பிகள் பறந்து வந்து கலைஞர் ஏன் தூத்துகுடிக்கு போகவில்லை என்கின்றார்கள்