ரஜினியினை பார்த்து எவனோ அடையாளம் தெரியாமல் “நீங்கள் யார்?” என கேட்டுவிட்டான். இதற்குத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம்.
1980ளில் ராமசந்திரனை பொம்மை போல் வைத்திருந்தார்கள், பொம்மை என்றால் மேக் அப், தொப்பி, கண்ணாடி, பல்செட் என வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள்
உண்மையில் திரைபடத்தை விட முதல்வர் வேடத்தில் அட்டகாசமாக நடித்தார் ராமசந்திரன், குறிப்பாக திரை உலகை நோட்டம் பார்க்கின்றேன் என அவர்களோடு கொஞ்சிகொண்டே இருந்தார்
அண்ணனுக்கு என் மேல் அவ்வளவு பிரியம் என பாரதிராஜா, பாக்யராஜ் , சத்யராஜ் என பலர் அப்பொழுதுதான் பேச தொடங்கினார்கள். பிரியம் ஒன்றுமில்லை எல்லாம் அரசியல்
பொதுவாக ராமசந்திரனை நினைத்தவுடன் பார்க்க முடியாது, அலங்காரம் முடித்து வந்தபின்புதான் பார்க்க முடியும்
அன்றைய தினம் பிறந்தநாளுக்கு வாழ்த்து வாங்க என அந்த நடிகர் சென்றிருக்கின்றார், வாயில் காப்போன் சொல்லியும் கேளாமல் “அண்ணனுக்கு என் மேல எவ்வளவு பிரியம் தெரியுமுங்களா” என சொல்லிவிட்டு உள்ளே ஓடியிருக்கின்றார்
அங்கே கண்ணாடியின்றி, வழுக்கு தலையுடன், வாயில் பல் இன்றி ஒரு உருவம் இருந்திருக்கின்றது, எடுத்த எடுப்பில் “நீங்கள் யார்?” என கேட்டிருகின்றார் நடிகர்
அவ்வளவுதான் ராமசந்திரன் சில சமிக்கைகளை கொடுக்க அவரின் மெய்பாதுகாவலர்கள் பிடித்து சாத்தி புத்தி சொல்லியிருக்கின்றார்கள்
அதிர்ச்சி விலகாத நடிகரை பிடித்து, இப்படி எல்லாம் வர கூடாது, வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என சொல்லி சிரித்த முகத்துடன் அனுப்பிவைத்தார் ராமு
முதுகில் அடிவாங்கிய வலியுடன், பொன்மன செம்மல் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க என ஓடினாராம் அந்த நடிகர்
அவர் செய்த தவறென்ன ? “நீங்கள் யார்” என மேக் அப் இல்லா ராமசந்திரனை கேட்டது
அட அவ்வளவு ஏன்? அப்பல்லோவில் ஜெயாவினை பார்க்க அனுமதித்திருந்தாலும் மேக் அப் இல்லா ஜெயாவினை பார்த்து பன்னீரும் பழனிச்சாமியும் அப்படித்தான் கேட்டிருப்ப்பார்கள்
அப்படி மேக் அப் இல்லாத ரஜினியினை பார்த்து எவனோ அடையாளம் தெரியாமல் “நீங்கள் யார்?” என கேட்டுவிட்டான். இதற்குத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம்.