ஸ்டெர்லைட் மூடபட்டதில் இருவருக்குமே உள்ளூர வருத்தம் போல…

ஸ்டெர்லைட்டை தொடங்கிவைத்தது ஜெயலலிதா :ஸ்டாலின்

ஸ்டெர்லைட் விரிவாக்க நிலம் வழங்கியது ஸ்டாலின் : பழனிச்சாமி

ஸ்டெர்லைட் பற்றி என்னோடு விவாதிக்க தயாரா : ஸ்டாலின்

மிஸ்டர் பொறுப்புக்களா? ஸ்டெர்லைட்டை வளர்த்து அதில் பலன் பெற்றதில் நீங்கள் இருவருமே உண்டு, சந்தேகமே இல்லை

ஜெயா, கலைஞர் ஆட்சியில் ஸ்டெர்லைட் செயல்பட்டுகொண்டுதான் இருந்தது, மறுக்க முடியாது

ஆக இரண்டுபேரும் ஸ்டெர்லைட்டில் மாபெரும் குற்றவாளிகள், இது உலகிற்கே தெரியும்

இப்பொழுது ஆலையினை மூடிவிட்ட பின் இந்த கும்மாங்குத்து ஏன்? தமிழகத்தில் வேறு பிரச்சினையே இல்லையா?

ஸ்டெர்லைட் மூடபட்டதில் இருவருக்குமே உள்ளூர வருத்தம் போல…


இந்த ஸ்டெர்லைட் மூடப்பட எவ்வளவு போராட்டம், எவ்வளவு உயிர்பலி

இதெல்லாம் கட்சி, அரசியல், இன்ன பிற இம்சை மூலம் தீர்க்கும் விஷயங்களா என்றால் சுத்தமாக இல்லை,

விவகாரம் தொழிலாளர் கரங்களில் இருக்கின்றது

அபாயகரமான ஸ்டெர்லைட்டை, மக்களை கொல்லும் ஸ்டெர்லைட்டை மூடும்வரை எந்த தொழிற்சாலையும் இயங்காது என தொழிலாளர்கள் கிளம்பியிருந்தால் என்றோ ஸ்டெர்லைட் மூடபட்டிருக்கும்

இதற்கெல்லாம் கட்சிகள் அரசியலை மீறிய தொழிற்சங்கங்கள் வேண்டும், உண்மையான மார்க்ஸிஸம் வேண்டும்

இங்கு அண்ணா பெயரிலும், ராமசந்திரன் பெயரிலும் இன்னபிற அயோக்கியர்கள் தொழிற்சங்கங்கள் முளைத்த நேரத்திலே எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது

தொழிற்சங்கத்தில் தமிழக அரசியல் புகுந்ததால் ஏற்பட்ட அவமான வீழ்ச்சி இது.

உலக வரலாற்றையே தொழிலாளர்கள்தான் மாற்றினார்கள்

அண்ணா திமுக பாட்டாளிகள் இயக்கம் என சொல்லி வளர்த்தபொழுது இது தென்னாட்டு லெனின், தமிழ்நாட்டு கமால் பாஷா, திராவிட காஸ்ட்ரோ என்றுதான் தொழிலாளர் வர்க்கம் பின் சென்றது

அதில் விவசாய தொழிலாளர்களும் உண்டு. திமுகவின் வெற்றி இப்படித்தான் தொடங்கியது

தொழிற்சங்கங்கள் ஒன்றே எந்நாளும் முதலாளிகளை மிரட்டும் விஷயம், அது சரியாக இல்லாவிட்டால் இப்படித்தான்

இதை சொன்னால் நம்மை நக்சலைட் என்பார்கள்