திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஸ்டெர்லைட் போராட்டம் 13 உயிர்பலியோடு முடிந்திருக்க கூடாது என்பதுதான் சோகம், நிச்சயம் அப்பலி நடந்திருக்க கூடாது

எனினும் இப்பொழுது ஸ்டெர்லைட் மூடபட்டாயிற்று

அந்த அப்பாவிகள் 13 பேரும் ஸ்டெர்லைட்டை மட்டும் மூடப்பட சாகவில்லை, ஒரு சில முகங்களை அடையாளம் காட்டிவிட்டு செத்திருக்கின்றார்கள்

அதனால் விழித்துகொண்ட உளவுதுறை மிக அட்டகாசமாக புள்ளிகளை குறி வைத்து கொடுக்கின்றது, அரசு தூக்குகின்றது

வேல்முருகனை உள்ளே போட்டிருப்பதும், நாம் தமிழர் தும்பிகளை போட்டு சாத்த ஆரம்பித்திருப்பதும் இம்மாநிலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள்

மக்கள் போராட்டம் எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு இந்நாட்டிற்கு எதிராகவும், மிக மிக கொடூர சிந்தனையிலும் இவர்கள் பேசிகொண்டு இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மனதில் விதைதது எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது

அரசு இப்பொழுது மிக துணிவான நடவடிக்கைகளை எடுக்கின்றது, இது இன்னும் தொடரட்டும்

விழித்துகொண்ட உளவுதுறைக்கும், நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்ட காவலருக்கும் வாழ்த்துக்கள்

திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஆழவேர்விட்டு வளரும் ஆலமரத்திற்கும், மழையில் முளைக்கும் காளான்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது இதுதான்


1960களிலே இணையம் , சமூக வளைத்தளம் எல்லாம் இருந்திருந்தால் ராமசந்திரன் என்பவரை ஓட ஓட அடித்து விரட்டி இருக்கலாம்

அப்படி ஒரு நபர் இருந்த இடமே தெரிந்திருக்காது

காலம் அவரை முன்னால் கொண்டுவந்து தப்பிக்க செய்துவிட்டது என்பதுதான் மகா சோகம்…

அவன் தப்பிவிட்டானே என்ற ஆத்திரத்தில்தான் இனி ஒருபயலும் அந்த வழியில் வந்துவிட கூடாது என்று அவருக்கு விழவேண்டிய அடியினையும் சேர்த்து இங்கு பலருக்கு கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்