அக்குடும்பம் ஒரு இசைகுடும்பம்

Image may contain: 3 people, people smiling, people sitting

இளையராஜாவின் பிறந்தநாளில் டிவி முதல் ரேடியோ வரை அவரின் பாடல்களே ஓடுகின்றன, அற்புதமான பாடல்கள்

இளையராஜா பற்றி குறிப்பிடும்பொழுது அவரின் சகோதர் கங்கை அமரனை குறிப்பிடாமல் இருக்க முடியாது, நிச்சயம் இளையராஜாவில் அவர் பாதி

அவரில்லாமல் இளையராஜா முழுமை அடைய முடியாது, ஆனால் சூரிய வெளிச்சத்தில் நிலா தெரியாது என்பது போல கங்கை அமரன் வெளிச்சம் பெறவில்லை

Image may contain: 3 people, people smiling, people sittingவரதராஜன், பாஸ்கர் போன்ற மற்ற சகோதரர்களும் இசைகலைஞர்கள் ஆனால் பெரிதும் வெளிதெரியவில்லை

(இளையராஜாவின் சரிவு கங்கை அமரன் பிரிந்தபின்னே தான் முழுக்க நடந்தது என்பது வேறுவிஷயம்)

மொத்தத்தில் அக்குடும்பம் ஒரு இசைகுடும்பம்

அதனால்தான் இன்று அடிக்கடி “ஏழேழு தலைமுறைக்கு எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தோம் நல்ல வரம்” என அந்த பாடல் ஒலித்துகொண்டே இருக்கின்றது

இப்படி ஒரு பாடல் பாட கலைஞர் குடும்பத்திற்கும் முழு தகுதி உண்டு, மன்னார்குடி குடும்பத்திற்கும் உண்டு

ஆனால் மன்னார்குடி குடும்பம் இப்பொழுது பாடும் நிலையில் இல்லை

அப்படி “ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி…” பாடவேண்டிய முழு தகுதி கலைஞர் குடும்பத்திற்கே உண்டு, ஆனால் பாடமாட்டார்கள்.

முழு பகுத்தறிவு என்பது அதுதான்


நேற்று மாலை வரை ரஞ்சித் பறையனார் பாசறை, பா.ரஞ்சித் புரட்சி படை, புரட்சி, மக்கள் சக்தி என பொங்கிகொண்டிருந்தவன் எல்லாம் நேற்று நள்ளிரவு முதல் இளையராஜா என உருகி உருகி பொங்கி

கொண்டிருக்கின்றான்

இளையராஜாவிற்கும் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?


 

சாமி 2 படத்து டிரெய்லர் சிக்கலில் இருக்கின்றதாம், காரணம் ஸ்டெர்லைட் போராட்டம்

இப்பொழுது அந்த டிரெய்லர் வந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லை ஏன்?

டிரைலரில் நெல்லை தமிழில் “நான் பொறுக்கிலே, நடு ரோட்டில் தலையின் சுடுவேம்ல” இது போன்ற போலீஸ் வசனங்கள் நிறைய இருக்கின்றதாம்

துப்பாக்கி சூட்டால் தூத்துகுடி கொதித்துகொண்டிருக்கும் போது இப்படி ஒரு வசனத்தோடு டிரெய்லர் வந்தால் உருப்படுமா? தொலைத்துவிடுவார்கள்

இதனால் அந்த டிரெய்லரையும் படத்தையும் தூக்கி பரணில் போட்டாகிவிட்டதாம்

கேயாஸ் தியரி என்பது இதுதான்