தமிழிசைக்கு இன்று பிறந்தநாள் : வாழ்த்துக்கள்
உண்மையில் அவர் ஒரு அப்பாவி, மனதில் பட்டதை ஆண்டவனே தடுத்தாலும் தைரியமாக பேசும் ஒரு பலம் அவருக்கு உண்டு. அதை பயன்படுத்தி தமிழக அரசியலில் கல் வீசும் கலையினை பாஜக செய்து வருகின்றது
இன்றைய தமிழக அரசியலில் அதிரடி, சுவாரஸ்யம், காமெடி விஷயங்களை மகா சீரியசாக சொல்லுவது என அவர் நிச்சயம் ஒரு அடாவடி பார்ட்டி
அனுதினமும் அவரும் பேசுகின்றார், ஆளாளுக்கு அவரின் தலைமுடி முதல் செருப்பு வரை கலாய்க்கின்றார்கள்
ஆனால் கொஞ்சமும் கலங்காமல் மிக தைரியமாக பேசிகொண்டிருப்பவர், இன்னொரு கோணத்தில் பார்த்தால் அந்த தைரியம் வாழ்த்துகுரியது
அவர் ஜெயா, கலைஞர் இருக்கும்பொழுதே பேசினார், ஆனால் அப்பொழுது முக்கியத்துவம் பெறவில்லை. இப்பொழுது ஆளில்லாத காட்டில் அவரின் முழக்கம் தனித்து கேட்கின்றது
என்ன சொல்லுங்கள், சகிப்புதன்மையின் உச்சம் அவர். அரசியல் என்றால் இப்படித்தான் துணிந்து நிற்க வேண்டும் என்ற தைரியம் அவரிடம் இருக்கின்றது
சினிமா புகழினின்றி, நடிகைக்குரிய விளம்பரமின்றி, குடும்பத்தார் உதவியுமின்றி ஒரு பெண் அரசியலில் குறிப்பிட்ட இடத்திற்கு வரமுடியும் என நிரூபித்தவர் தமிழிசை, சாதாரணம் அல்ல
பாஜக எனும் கட்சி அதை சாத்தியமாக்கி இருக்கின்றது, இன்னொரு கட்சியில் தமிழிசை இருந்தால் கவனம் பெற்றிருப்பார்?
தமிழக அரசியல்வாதிக்குரிய எல்லா இலக்கணங்களையும் உடைத்தெறிந்து வந்து நிற்பவர் தமிழிசை, அதற்காக அவருக்கு கை கொடுத்து வாழ்த்தலாம்
அதற்காக அவரை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்
நாமெல்லாம் அவரை எவ்வளவு கலாய்க்கின்றோம் ஆனாலும் அவர் வந்து நின்று தாமரை மலர்ந்தே தீரும் எனும்பொழுது சிரித்துவிட்டு நகரத்தான் முடிகின்றது
அந்த தமிழிசைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவர் விருப்பட்டபடி தாமரை என்றேனும் மலர்ந்து தீரட்டும் எனும் வாழ்த்தொடு அவரை வாழ்த்துவோம்
நிச்சயம் இப்படி ஒரு தொண்டர் கிடைக்க தமிழக பாஜக கொடுத்து வைத்திருக்க வேண்டும்
அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன, பொதுவாழ்வில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என பல இடங்களில் அவர் நிரூபிக்கத்தான் செய்கின்றார்
அவர் பல்லாண்டு வாழட்டும், இன்னும் வளரட்டும்
அகத்தீஸ்வரத்து தெய்வம் முதல் அயோத்தி தெய்வம் வரை அவரை ஆசீர்வதிக்கட்டும்
வாழ்த்துக்கள் அக்கா..