ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை

ஸ்டெர்லைட்டின் பாதிப்பு என்னவென்பது நேரில் கண்டதில்லை, பாதிக்கபட்டவர்களின் ஓலம் மட்டும் கேட்டது. சில நிபுணர்களின் ஆய்வுகள் ஸ்டெர்லைட் அபாயகரமானது என சொன்னபின் அது வெடித்தது

ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை, அதன் கழிவுகள் சூழலை மட்டுமல்ல கடலையே நாசபடுத்தியவை

அந்த வைகுண்டராஜனின் அரசாங்கள் தூத்துகுடிக்கு வடக்கே இருந்து கன்னியாகுமரி வரை ஆண்ட பொழுது கடலே சிகப்பு நிலத்தில் இருந்தது, அப்படி ஒரு கொடும் அழிவு எங்கும் சாத்தியமில்லை

மீணவர் தொழில் அழிந்தது, மீன் இனம் அழிந்தது, அவர்கள் கதறத்தான் செய்தார்கள் ஆனால் யார் காதிலும் விழவில்லை

மணலை அள்ளி கடற்கரையினை நாசபடுத்தியது, மணலை பிரிக்கின்றோம் என கடற்நீரை மாசுபடுத்தியது இதில் ஏகபட்ட ரசாயாணம் கலந்து மீன்பாடு, மீணவர் நலம் கெட்டது என ஏராளம்

குமரியும் நெல்லை கடற்கரையும் புற்றுநோயில் அகப்பட்டதற்கு இவை முதற்காரணம், இந்த மாசடைந்த கடல் மீன்களை உண்டவர் நிலை இன்னும் மோசம்

நிச்சயமாக சொல்லலாம் ஸ்டெர்லைட் குறிப்பிட்ட இடத்தை நாசபடுத்தியது, ஆனால் வைகுண்டராஜனின் ஆலைகளும், தயா தேவதாஸ் ஆலைகளும் அழித்த அழிவு கொஞ்சமல்ல‌

இதை எல்லாம் நியூஸ்7 பேசுமா? மற்ற தொலைகாட்சிகள் பேசுமா என்றால் சத்தியமாக இல்லை

வடநாட்டவன் செய்தால் அழிவு, அதையே இவர்கள் செய்தால் ஏழைகளுக்கு வேலை கொடுக்கும் புனிதமான திட்டம்

ஸ்டெர்லைட் நச்சு வாயு , நச்சு நீர் ஆபத்து என்றால் தாதுமணல் ஆலைகள் இவைகளுடன் கதிரியக்க ஆபத்துக்களும் கொண்டவை

ஆனால் இதெல்லாம் பேசமுடியாது, பேசமாட்டார்கள்

காரணம் ஸ்டெர்லைட் வடநாட்டவன் கம்பெனி பொங்குவார்கள், தமிழன் கம்பெனி தமிழனை அழித்தால் சத்தம் வராது

ஆறுதலாக ஸ்டெர்லைட் போல வைகுண்டராஜனின் ஆலைகளும் மூடிகிடக்கின்றன‌

இரண்டும் நிரந்தரமாக மூடபடட்டும், தென்னகம் ரசாயாண பிடிகளில் இருந்து விடுபடட்டும்