புரட்சி வசனங்களை அணல் தெறிக்க பேசுகின்றார் தலைவி

Image may contain: 1 personகலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு திரைப்படங்களில் பொன்னார் சங்கர் ஓடிகொண்டிருக்கின்றது

அற்புதமான படம், மாபெரும் வெற்றியினை அது பெறாமல் போனதில் தியாகராஜனுக்கும் அவர் மகனுக்கும் மட்டுமே பங்கு, வேறு எல்லாம் கிளாசிக் வகை

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் தலைவி குஷ்பு, அந்த தாமரை பாத்திரத்தில் அப்படி ஜொலித்திருந்தார்

அரசிக்கு ஏற்ற கம்பீரம், கலையாடும் முகம், ராணி முகத்திற்கேற்ற கருணையான பாவம்

அட அட அட அக்கால மங்கம்மா, ருத்திரமா எல்லாரும் இப்படித்தான் இருந்திருப்பர் என சொல்ல வைக்கும் கம்பீரம்

பாகுபலியில் அந்த ராஜமவுலி கொஞ்சம் சிந்திருந்த்தால் , தலைவியினை நடிக்க வைத்திருந்தால் படம் டைட்டாணிக் அளவு ஆஸ்கரை குவித்திருக்கும்

தலைவி இல்லாததால் ஆஸ்கர் பாகுபலிக்கு கிடைக்கவில்லை

இனியாவது ராஜமவுலி தன் தவறை திருத்தி தலைவியினை நடிக்க வைத்து ஆஸ்கர் வாங்க சங்கம் ஆலோசனை சொல்லி வாழ்த்துகின்றது

கலைஞரின் தமிழ் படத்தில் அழகு, அதனையும் மிஞ்சி நிற்க்ன்றது தலைவி முகம்

எம்மை பொறுத்தவரை தமிழின் மிகசிறந்த படம் பொன்னர் சங்கர், ஆனால் ஒரே நிபந்தனை தலைவி வரும் காட்சிகள் மட்டும் பார்க்க வேண்டும்.

(இந்த அற்புத நடிகைக்கு ஏன் தேசிய‌ விருது கிடைக்கவில்லை என்றால் அதுதான் இந்திய பாழ்பட்ட அரசியல்.

சரி ஆஸ்கர் ஏன் கிடைக்கவில்லை என்றால் அதுதான் உலக அரசியல், பிளடி பாலிடிக்ஸ்.)


Image may contain: 2 people, close-upஇந்த நாள் நிச்சயம் இனிய நாள்

ஆம், தலைவியின் அட்டகாச நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வருகின்றன. அதில் “இளைஞன்” படமும் ஒன்று

புரட்சி வசனங்களை அணல் தெறிக்க பேசுகின்றார் தலைவி.

என்ன ஒரு நடிப்பு.. என்ன ஒரு உணர்ச்சி முழக்கம்?

தலைவியின் இந்த புரட்சி” பாத்திரத்தைத்தான் “கபாலி “காலா” என காப்பியடித்து படமாக்கிவிட்டு அதில் தலைவிக்கு ஒரு வேடம் கூட அவருக்கு கொடுக்கவில்லை.

பின் எங்கே இருந்து அந்த படங்கள் கரையேறும்? மூழ்கித்தான் போகும்

மனோகரா கண்ணாம்பாளுக்கு பின் அணல் தெறிக்கும் பேச்சு தலைவிக்கு மட்டுமே சாத்தியம்