இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி
இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி
அதாவது புலிகள் பயன்படுத்திய கட்டங்கள், படகுகள் இன்ன பிற சொத்துக்கள், நிலங்கள் எல்லாம் அரசு எடுத்துகொண்டது இது இந்திய பணத்தில் சுமார் 900 கோடி வரலாம்
ஆனால் யாரும் கண்டிக்கவில்லை ஏன் என்றால் ஆட்சியில் இருப்பது பாஜக, கலைஞரும் ஓய்ந்துவிட்டார்
இல்லை என்றால் எப்படி கிளம்புவார்கள்? இப்படித்தான்
இலங்கை அரசு பெரும் அநீதி செய்திருகின்றது,
புலிகளின் சொத்து ஈழமக்களுக்கோ இல்லை பிரபாகரனின் அண்ணனான வைகோவிற்கு அவரின் தம்பியான சைமனுக்கோத்தான் செல்ல வேண்டும்
இதை கண்டிக்காத கருணாநிதி, புலி சொத்துக்கள் பறிபோவதை தடுக்காத கருணாநிதி தமிழின துரோகி
அப்படியே காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தால், ஈழ தமிழர் சொத்துக்களை அபகரிக்கும் சிங்கள இனவாத அரசினை கண்டிக்காத தமிழர் விரோத காங்கிரஸ் அரசு ஒழிக என்ற வார்த்தையினையும் சேர்த்துகொள்வார்கள்