தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..
அந்த ஜெயலலிதா அப்பொழுது நடிகை, தான் தமிழச்சி என பத்திரிகைக்கு சொல்லிவிட்டு பெங்களூர் படபிடிப்பிற்கு சென்றார்
இதே வாட்டாள் நாகராஜ் “கன்னட துரோகியே மன்னிப்பு கேள்” என அவர் தங்கிய வீட்டை முற்றுகையிட்டு பயமுறுத்தினான்
படகுழுவும் இன்னபிற சக்திகளும் எவ்வளவோ கெஞ்சியும் “நான் தமிழச்சி, ஒருகாலமும் இவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என தமிழிலே பேசி தைரியமாக நின்றார் ஜெயா.
அதன் பின் சட்ட நடவடிக்கை மூலம் விரட்டபட்டான் நாகராஜ்
தன்னை மலையாளி என்றவர்களுக்கு பதிலடியாக கேரளா சென்று நான் தமிழன் தமிழிலில்தான் பேசுவேன் தமிழ்நாடு எனக்கு சோறுபோட்ட பூமி என தைரியமாக நின்றார் ராமசந்திரன்
இதோ காலாவிற்காக கன்னடத்தில் கன்னடரிடம் கெஞ்சுகின்றார் ரஜினி
மகா கேவலம், அவமானம்
ரஜினியின் மொத்த பிம்பமும் நொறுங்கி சரியும் நேரமிது
கேவலம் பட வசூலுக்காக கன்னடனிடம் கெஞ்சிகொண்டிருக்கும் இவரை என்ன நினைப்பார்கள்?
தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..
பத்திரிகையாளர் ஏதும் கேள்வி கேட்டால் “ஏய்ய்ய்ய் வேற கேள்வி இருக்கா?..” என சீறும் ரஜினி வாட்டாள் நாகராஜ் என்றால் தலையினை தொங்க போடும் மர்ம்மம் என்ன?
அவரிடம் “ஏய்ய்ய்ய்ய்” என சீறினால் என்ன மிஸ்டர் ரஜினி??