காலாவுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Image may contain: 1 person

“காலா’வுக்கு தடையில்லை; திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

அது எம்.ஆர் ராதா சுடபட்ட நேரம், காமராஜர் ஆட்சியில் உங்கள் அபிமான ராமசந்திரன் சுடபட்டார் என திமுக அழிச்சாட்டியத்தை தொடங்கியது

தமிழகத்தில் அசாதாரண நிலை தென்பட்டது, போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது

“ராமசந்திரன் தனிபட்ட விவகாரத்தில் சுடபட்டார்ண்ணே, நா என்ன செய்யட்டும்ணே?” என்ற காமராஜரின் குரலும் எடுபடவில்லை

திமுக இதுதான் வாய்ப்பு என ஒப்பாரி வைத்தது, ராமசந்திரனின் கண்மணிகளோ வன்முறையில் ஈடுபட்டன‌

ஒரே ஒரு குரல் மட்டும் துணிந்து பேசியது, அது பெரியாரின் குரல்

“ஒரு கூத்தாடி பயல இன்னொரு கூத்தாடி பய சுட்டதுக்கு இந்த மாகாணமே போர்களம் ஆகுதுண்ணா இந்த மக்களுக்கு சுத்தமா அறிவே இல்லீங்க‌

சர்க்கார் மக்கள கவனிக்குமா, இல்ல இந்த கூத்தாடிகள கவனிக்குமா? இதெல்லாம் அநியாயமுங்க. இந்த கூத்தாடி பயலுக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் என்ன பண்ணிட்டானுகன்னு இவ்வளவு கலவரம்?

இன்னும் இவங்க நிறைய சிந்திக்கணுமுங்க, சிந்திக்க வைக்கணுமுங்க‌

கூலிக்கு கூத்தாடும் பயலுகளை எல்லாம் பெரிய ஆளா உருவாக்குறத இந்த திமுக பயலுக நிறுத்தணுமுங்க, மக்களும் உணரணுமுங்க , இல்லண்ணா நாடு கெட்டுபோமுங்க”

பெரியாரின் வாக்கு இப்பொழுதும் கேட்கின்றது, அதுவும் காலா படத்திற்கு உச்சநீதிமன்றம் எல்லாம் பேசவந்துவிட்டபின் அக்குரல் மிக சத்தமாகா கேட்கின்றது