ராபர்ட் கென்னடியின் நினைவு நாள் இன்று …
இந்திரா குடும்பம் போலவே துரதிருஷ்டம் பிடித்த குடும்பம் அமெரிக்காவின் கென்னடி குடும்பம்
நமக்கெல்லாம் ஜாண் கென்னடி தெரியும், அமெரிக்காவின் மிக பிரசித்திபெற்ற அதிபர், அவரின் மகா துணிச்சலும் நாட்டுபற்றும் இன்றுவரை அமெரிக்கர்களை கண்ணீர் விட வைக்கும் விஷயங்கள்
கென்னடிக்கு பல சகோதரர்கள் உண்டு, அவர்களில் ஒருவர் ராபர்ட் கென்னடி
ஜாண் கென்னடி போலவே ராபர்ட் கென்னடியும் அரசியலில் வேகமாக முன்னேறிகொண்டிருந்தார். மற்ற அமெரிக்க அதிபர்களிடம் இல்லா ஒரு விசித்திர தன்மை அவரிடம் இருந்தது
ஆம், கருப்பர்களை அவர் நேசித்தார். மார்ட்டின் லுத்தர் கிங்கின் போராட்டத்தை ஆதரித்தார், அந்த புகழ்பெற்ற சிவில் சட்டம் முழு வடிவம் பெற ஒத்துழைத்தது அந்த ராபர்ட் கென்னடியே
ஆனால் வரலாறு மார்ட்டின் லுத்தரை குறிப்பிட்ட அளவு ராபர்ட் கென்னடியினை குறிப்பிடவில்லை
திமுகவின் சகல அடையாளமும் கலைஞர் என மாறிப்போனதில் எப்படி மதிவாணன், சிற்றரசு, சம்பத் என பல ஜாம்பவான்கள் மறைக்கபட்டார்களோ அப்படி அங்கு சகலமும் மார்ட்டின் லுத்தர் கிங் என்றே ஆனது
உண்மையில் அந்த கருப்புமக்களின் போராட்டத்திற்கு துணை நின்றவர் அந்த ராபர்ட் கென்னடி
வியட்நாம் போரினை எதிர்த்தார், கருப்பர்கள் உரிமையினை அங்கீகரித்தார் என அவரை அமெரிக்க தேசம் ஒருமாதிரி பார்த்தது
அடுத்த அமெரிக்க அதிபர் எனும் வகையில் ஆதரவு பெருகிற்று
அப்பொழுதுதான் இஸ்ரேல் தன் புகழ்பெற்ற 6 நாள் போரினை வெற்றிகரமாக நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது
அமெரிக்கர்களின் மனப்பான்மையில் ராபர்ட் கென்னடி அதனை வரவேற்றார், மோஷே தயானை வெகுவாக பாராட்டினார்
இந்த நிகழ்வு பாலஸ்தீனியருக்கு வெறுப்பேற்றியது, வருங்கால அமெரிக்க அதிபர் இப்படிபட்டவரா? என்ற கோபத்தில் பாலஸ்தீன இளைஞன் ஒருவன் அவரை சுட்டு கொன்றான்
(சும்மாவே பாலஸ்தீனத்தினை அடிக்க துணை நிற்கும் அமெரிக்கா அதன் பின் வரிந்து கட்டி அடிக்க ஆரம்பித்து அது இன்றுவரை தொடர்கின்றது)
கென்னடிக்கும், மார்ட்டின் லுத்தருக்கும் என்ன நேர்ந்ததோ அதுவே ராபர்ட் கென்னடிக்கும் நேர்ந்தது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனினும் அமெரிக்கா வலுவான தலமையினை பெற்றுவிட கூடாது என்ற அந்நிய சக்திகளின் திட்டம் என கடைசியில் முடிவு செய்யபட்டது
கென்னடி போலவே மகா துணிச்சலான அந்த ராபர்ட் கென்னடி பதவிக்கு வருமுன்பே கொல்லபட்டார்
இன்னும் கென்னடியின் வம்சத்தில் பலர் திடீர் விபத்துக்களில் கொல்லபட்டனர், வரலாற்றின் மிகபெரும் மர்மம் இது
கென்னடி குடும்பம் மறுபடி பதவிக்கு வராமல் ஏதோ ஒரு சக்தி பார்த்துகொண்டது
இன்று அந்த ராபர்ட் கென்னடியின் 50ம் நினைவு நாள்
அமெரிக்க வரலாற்றின் மாபெரும் இளந்தலைவர் அவர், பல்வேறு காரணங்களுக்காக கொல்லபட்டவர், ஆனால் நிச்சயம் நாட்டுக்காக உயிர்விட்டவர்
மார்ட்டின் லுத்தரை போலவே அவரும் ஒரு புரட்சியாளர், அந்த புரட்சி வெற்றிபெற முழுபாடு பட்டவர்
அமெரிக்க கென்னடி குடும்பத்திற்கும் இந்தியாவின் இந்திரா குடும்பத்திற்கும் தியாக தொடர்புகள் ஒரே மாதிரி உண்டு
ராஜிவ் கென்னடி. சஞ்சய் ராபர்ட் கென்னடி என சோகமான பொருத்தங்கள் ஏராளம்
இனி அப்படி நடக்காமல் இருக்க பிரார்திப்போம்
அந்த அமெரிக்க தேசம் அந்த ராபர்ட் கென்னடியின் நினைவில் இன்று மூழ்கி இருக்கின்றது
லிங்கனுக்கு பின் அமெரிக்க கருப்பர்களை நேசித்த மாமனிதன் அவர் என சொல்லி கண்களை துடைத்துகொள்கின்றார்கள்
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
(இப்பொழுது கருப்பர்களுக்காக பாடுபட்ட ராபர்ட் கென்னடி நினைவுநாளில் கறுப்பு காலா வந்திருக்கின்றது என சில அலப்பறைகள் கண்களை துடைத்துகொள்ளும், அதனை எல்லாம் நாம் கடந்து செல்ல வேண்டும்)