மிஸ்டர் சிவகுமார்??, அந்த கம்பெனி எங்கே இருக்கின்றது? சீக்கிரம் சொல்லுங்கள்
நானும் ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றேன், ஒரு மண்ணாங்கட்டி நிம்மதியும் இல்லை.
கைவலிக்க லேப்டாப்பினை தட்டினால் சைனா டீயும், குச்சி வைத்த நூடுல்ஸ் 2 கோப்பையும் வருகின்றது அவ்வளவுதான்
பக்கத்து சீட் சீனப்பெண்ணிடம் ஹாய் என்றால் கூட, “இதை சொல்லத்தான் இந்தியாவில் இருந்து வந்தாயா? ஒழுங்காக வேலை செய்..” என பார்வையிலே மிரட்டுகின்றாள்
இது போக அப்ரைசல் இம்சை வேறு..
சிவகுமாரின் பேச்சை கேட்டவுடன் ஐடி கம்பெனியிலும் சொர்க்கம் உண்டு என்பது புரிந்து துள்ளி குதித்தாயிற்று,
2 டண் காண்டம் அள்ளினார்களா?
இது போதாதா? இது அல்லவா வேலை, இது அல்லவா கம்பெனி
இனி சிவகுமாரிடம் கேட்டுவிட்டு அவர் சொன்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டியதுதான், படு சந்தோஷமான வேலை சூழல் கிடைக்கும் போலிருக்கின்றது
மிஸ்டர் சிவகுமார்??, அந்த கம்பெனி எங்கே இருக்கின்றது? சம்பளமே இல்லாமல் வேலை செய்ய தயார்…
சீக்கிரம் சொல்லுங்கள் சிவகுமார்,
கொடுக்கும் அடியினை எல்லாம் வாங்கிகொண்டு மதம் பிடித்தவுடன் அந்த அடியினை நினைவுபடுத்தி பாகனை தூக்கி எறியும் யானைபோல் எறிந்துவிட்டு அந்த சொர்க்கலோகத்திற்கு ஓடி வரவேண்டும்
நிதியானந்தா சாமி மடத்தில் அள்ளாத காண்டம் குப்பையினை..
சிவகுமாரின் மகன்கள் நடிக்கும், அவர் உறவினர் ஞானவேல்ராஜா என்பவர் உலாவும் சினிமா உலகில் அள்ளாத காண்டம் குப்பையினை..
ஏன் நிர்மலா தேவி நடமாடிய கல்லூரி அலுவலகம் பக்கம் கூட அள்ளாத காண்டம் குப்பையினை…
ஏராளமான பெண்கள் பணிபுரியும் இவரின் கார்மென்ட் ஆலையில் அள்ளாத காண்டம் குப்பையினை……
ஐடி கம்பெனிகளில் மட்டும் அள்ளினார்களாம், அதை அருகில் இருந்து பார்த்தாராம் சிவகுமார்
வயதனால் புத்தி தள்ளாடும் என்பது இதுதான்…
இப்படி எல்லாம் இந்த கிழடு உளறி கொட்டினால் ஐடி கம்பெனி பெண்களின் வாழ்வு என்னாகும்? எதிர்காலம் என்னாகும்? மதிப்பும் மரியாதையும் என்னாகும்?
கொஞ்சமாவது இந்த நபருக்கு சமூக பொறுப்பு இருக்கின்றதா?
எவ்வளவு பேர் பெயரும் அவர்கள் குடும்பமும் இந்த நபரின் பொறுப்பற்ற உளரலால் பாதிக்கபடும்,
எவ்வளவு குடும்பங்களில் சந்தேக புயல் வீசும்??
சினிமாவில் இவர் பார்த்தது போலவே ஐடி பெண்களும் இருப்பார்களா? இவரின் கேவலமான பார்வை இதுதானா?
விரைவில் ஐடி கம்பெனிகள் சார்பாக இந்த கூத்தாடி படத்திற்கு காண்டம் மாலை அணிவித்து போராட்டம் நடத்தபடும் என எதிர்பார்க்கபடுகின்றது
திரையுலக மார்கண்டேயனான சிவகுமார், இன்றுமுதல் “மார்”காண்டம்” நேயன் என வெறுப்போடு அழைக்கபடுவார்.
(வயசானாலும் டை அடித்து இளைஞன் போல சுற்றிவரும் பொழுதே இந்த மனிதரின் அற்ப புத்திகண்டு தமிழகம் சுதாரித்திருக்க வேண்டும்..)