நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி…

நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி, அதிலும் சிலர் தங்கள் பத்திரிகைகளில் பிரசரிகின்றனர் எனும்பொழுது அது கூடுகின்றது, நம்மையும் அங்கீகரிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.
டி.ராஜேந்தர் பற்றி எழுதியதை நண்பர் அந்தணன் அவர்கள் அவரின் பத்திரிகையிலே வெளியிட்டிருக்கின்றார். அது இன்றைய சினிமா உலகின் தவிர்க்கமுடியாத பத்திரிகை, கோடம்பாக்க காற்று அங்கு வடிகட்டிய பின்புதான் வெளியேறும்.
மகா முக்கியமான சினிமா இதழ் அது.
எப்படியும் இது கவிஞர் டி.ராஜேந்தரின் கவனத்திற்கு செல்லும் என்பது உறுதி.
விஞ்ஞான வளாகத்தில் , வாய்ப்பே இல்லாத பல விஷயங்கள் சாத்தியமாகின்றன, அந்த பத்திரிகைக்கும் நண்பர் அந்தணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
ஒன்று புரிகின்றது, நம்மைபோலவே டி.ஆர் பாடல்களுக்கு ஏகபட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள், அவரை கவிஞராக கொண்டாடுகின்றார்கள். இன்றும் அவர் கவிஞராக திரும்ப காத்துகொண்டிருக்கின்றார்கள்.
அது நமக்கு நன்றாய் புரிகின்றது, அவர் எப்படியும் எடுத்துகொள்ளட்டும், பார்வைக்கு வைத்தாயிற்று.
(இப்படியே ஒரு நாள் ஜெயபிராதவின் பார்வைக்கும் வந்துவிட மாட்டோமா? வந்துவிடலாம், பார்த்து ஒரு செல்பி எடுக்கலாம், பிறவி பெருங்கடலை ஒரே ஜம்பில் தாண்டிவிடலாம் 🙂 ,
ஏ மனமே நம்பிக்கை கொள். லட்சியம் நிச்சயம் வெல்லும்..)