ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல
பார்க்கும் இடமெல்லாம் கலைஞரை வணங்குவார் ரஜினி, 1996ல் கலைஞருடன் அவர் காட்டிய நெருக்கம் உலகறிந்தது
பின் சட்டென மாறினார், என் வோட்டு இரட்டை இலைக்கு என்றார், வாக்களித்ததை கூட உலகெல்லாம் வீடியோவில் காட்டினார்
கலைஞர் அமைதியாக சொன்னார்., “வாக்களிப்பது இவர் சொந்த விஷயம், ஆனால் இப்படி பகிரங்கமாக காட்ட வேண்டுமா? இந்த மனிதர் நம்பிக்கைகுரியவர் அல்ல”
ஜெயா இதனால்தான் ரஜினியினை ஓரமாக நிறுத்தியே வைத்திருந்தார், என்னதான் ரஜினி அம்மா ஜெயாஜி என்றாலும் ஜெயா அசரவில்லை
ரஜினி நம்பிக்கைகுரிய மனிதர் அல்ல என்பது அவரின் கணக்கு
எல்லோரும் அவரிடம் பழகிவிட்டு இந்த முடிவிற்கே வந்தனர், சோ ராமசாமிக்கு கூட சலிப்பாயிற்று
இன்று ஏதாவது விஜய்படத்தில் சிக்காதா? வேறு யார் படத்திலாவது சிக்காதா? வைரமுத்து சிக்கமாட்டானா என திணவெடுத்து அலையும் பாஜக கோஷ்டி படம் பார்த்து அப்செட்டில் இருக்கின்றது
இவ்வளவிற்கும் ரஜினிக்கு பல இடங்களில் எவ்வளவு வக்கலாத்து வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கியவர்கள் அவர்கள்
இப்பொழுது அவர்களும் அதே முடிவிற்கு வந்திருப்பர்
“ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல”
இது இனி இமயமலை பாபாவிற்கு புரியும் முன் அவரின் ரசிகர்களுக்கு புரிந்தால் நல்லது