ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றால் சர்ச்சை வரத்தான் செய்யும்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சில காங்., தலைவர்கள் எதிர்ப்பு , இப்படி ஒரு சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது
ஆர்.எஸ்.எஸ் மேடையில் காந்தியே இருந்தார், இவர்களுக்கென்ன? என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்
ராஜிவ்காந்தியும் முன்பொரு காலத்தில் பிரபாகரனோடு போஸ் கொடுத்தார், அதற்காக ராஜிவ் பிரபாகரனை ஆதரித்தார் என சொல்ல முடியுமா?
விஷயம் அது அல்ல
ஆர்.எஸ்.எஸ் என்பது பாகிஸ்தான் போர் காலங்களிலும் , சீனப்போர் காலங்களிலும் தளபதி கரியப்பா, நேரு போன்றவர்களால் பாராட்டபட்டது என்பது வேறு விஷயம்
ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது இத்தேசத்தின் மாபெரும் கரும்புள்ளி, அதை தொடர்ந்து தடை செய்யபட்ட இயக்கம் அது
அப்படிபட்ட கொடூர சம்பவத்தின் அடித்தளமே ஆர்.எஸ்.எஸ் என்பது மறக்கவே முடியாத காயம்
அப்படிபட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றால் சர்ச்சை வரத்தான் செய்யும்.
“நாட்டில் சகிப்புதன்மை வேண்டும், அது இல்லாவிட்டால் பேராபத்து வரும்” : ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி
இதன் மூலம் அவர் சொல்லவரும் விஷயம் என்னவென்றால் ஏதோ நிர்பந்தத்தில் அவர் அந்த மாநாட்டிற்கு சகிப்பு தன்மையுடன் சென்றிருக்கின்றார்
ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பங்குபெற எவ்வளவு சகிப்புதன்மை வேண்டும் தெரியுமா? என அவர் மக்களை கேட்டுகொண்டிருகின்றார்
இது புரியாமல் அவரை திட்டிகொண்டிருக்கின்றார்கள்
அந்த சகிப்புதன்மை இல்லாவிட்டால் நாட்டிற்கு பேராபத்து வருமோ இல்லையோ இவருக்கு பெரும் ஆபத்து வந்திருக்கும் போல..