காந்திஜியை ரயிலில் இருந்து தள்ளிய நிகழ்வு
காந்தியின் வரலாற்றை மாற்றிய சம்பவம் தென்னாப்ரிக்காவில் நடந்த , ரயிலில் இருந்து அவரை வெள்ளையன் தென்னாப்ரிக்காவில் இறக்கிவிட்டது
இல்லை மிதித்து தள்ளியது, ஆம் வெள்ளையர் இருக்கையில் அவர் அமர்ந்திருக்க அங்கு வந்த வெள்ளையன் அவரை அடித்து கீழே தள்ளினான்
அதுவரை சமத்து வக்கீலாக ஒழுங்காக சம்பாதித்துகொண்டிருந்த காந்தி இந்த சம்பவத்திற்கு பின்பே போராட வந்தார், அது அங்கு வெற்றிபெற்றபின் அந்த தைரியத்தில் இந்தியாவிற்கும் போராட வந்தார்
இச்சம்பவம் நடந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன, சம்பவம் நடந்த ரயில் நிலையம் பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் உள்ளது
125 ஆண்டு நினைவினையொட்டி காந்தி விழுந்த இடத்தில் அவருக்கு சிலை வைத்திருக்கின்றார்கள், இந்தியா சார்பில் சுஷ்மா சென்று கலந்திருக்கின்றார்
மோடி ஏன் செல்லவில்லை என கேட்க கூடாது
அங்கு சென்ற சுஷ்மா காந்தியின் அருமை பெருமை எல்லாம் பேசி உருகியிருக்கின்றார்
இந்த பிஜேபியினருக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது, இந்தியா தாண்டி அயல்நாடு சென்றுவிட்டால் காந்தியினை என விழுந்து விழுந்து வணங்குகின்றனர்
ஆனால் இந்தியா திரும்பிவிட்டால் “காந்தியா? அவர் சும்மா , தேசத்தை பிரித்த துரோகி”,
” பட்டேல் வாழ்க”,”சாவர்கர் வாழ்க” என கிளம்பிவிடுவார்கள்
மிக வினோதமான நோய் இது