மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

இன்றைய சட்டசபை நிகழ்வில் மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

முதலவாது மேட்டூர் அணை திறப்பு இல்லை என சொல்லிவிட்டு நிலத்தடி நீரை பயன்படுத்துங்கள் விதை தருகிறோம், மின்சாரம் தருகின்றோம், அங்கே கொஞ்சிவிளையாடும் வஞ்சியருக்கு மஞ்சள் அரைத்து தருகின்றோம் என்ற அளவில் மகா அபத்தமாக பேசுகின்றார்கள்

6 ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்கபடவில்லை, காவேரி மணலையும் அள்ளியாயிற்று என்றால் நிலத்தடி நீர் என்ன ஜெயா கல்லறைக்கு அடியிலா கிடைக்கும்?

அப்பொழுதும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியோ, இம்மாதம் பெற வேண்டிய நீரை கன்னடத்திடமிருந்து பெரும் நடவடிக்கை பற்றியோ ஒரு அறிக்கையுமில்லை

மாபெரும் அபத்தம் இது, எதிர்கட்சி திமுகவோ இதுதான் வாய்ப்பு என மணி அடித்ததும் குதிதோடும் பள்ளி சிறுவர்களை போல சபையினை விட்டு ஓடிவிட்டது

இரண்டாவது பெரும் அழிச்சாட்டிய அறிவிப்பு டிரான்ஸ்பர்மர்கள மாற்றை தாமிர கம்பி இல்லையாம், ஸ்டெர்லைட் மூடபட்டதால் கம்பி இல்லையாம்

அட பைத்தியகார அரசே, ஸ்டெர்லைட் வரும் முன்னால் இங்கு டிரான்ஸ்பார்மரே இல்லையா? 1989ல் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கலைஞர் வழங்கும்பொழுது ஸ்டெர்லைட் எங்கிருந்தது

இது சாதாரண விஷயம் அல்ல, பழுத்த அரசியல்வாதி இருந்தால் பழனிச்சாமி அரசின் வேட்டியினை உருவ முடியும்

என்ன சொல்ல வருகின்றார்கள்? ஸ்டெர்லைட் தாமிரத்தில்தான் இங்கு டிரான்ஸ்பார்மரே இயங்கியது அதாவது எங்களின் பினாமியாக ஸ்டெர்லைட் இயங்கியது என சொல்லாமல் சொல்கின்றார்கள்

மிக ஆற்றல்வாய்ந்த எதிர்கட்சி இல்லாததால் விஷயம் தூங்குகின்றது, ஆனால் அட்டகாச அரசியல் வாய்ப்பு இது

எத்தனையோ அரசுகளை கண்ட சென்னை கோட்டை முதன் முதலாக கோமாளிகள் ஆட்சியினை கண்டுகொண்டிருக்கின்றது

நாமும் அதனை கண்டு தலையில் அடித்து கொண்டிருக்கின்றோம்