ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது
இன்னும் இரு நாட்கள்தான் இருக்கின்றது, உலகை மிரட்டும் இருவர் வருவதால் சிங்கப்பூர் கடும் பாதுகாப்பில் இருக்கின்றது
நேற்று வெள்ளையாக குண்டாக வெள்ளை குடைமிளகாய் போல ஒருவர் சிங்கப்பூர் வந்திருக்கின்றார், பிடித்து வைத்து கடும் பரபரப்பினை ஏற்படுத்திவிட்டார்கள். வடகொரிய தரப்பு எங்கள் தலைவர் வடகொரியாவில் இருக்கின்றார் என உறுதிபடுத்தியபின்புதான் பரபரப்பு தீர்ந்தது
இப்பொழுது வடகொரிய அதிபருக்கு புதிய பயம் வந்திருக்கின்றது, அதாவது தனக்கு உயிர் ஆபத்து என அவர் நினைத்துவிட்டார்
வரலாறும் அதைத்தான் சொல்கின்றது, சோவியத் அதிபர்கள் தவிர அமெரிக்காவினை எதிர்த்தவர்களை கொல்ல அவ்வளவு முயற்சிகள் நடந்திருக்கின்றன
காஸ்ட்ரோ மேல் கிட்டதட்ட 300 கொலை முயற்சிகள் நடந்தன, இறுதிய்ல் காஸ்ட்ரோவின் காதலியே உளவு சிக்கலில் மாட்டியபொழுது நீயே என்னை கொல் என கதறி நின்றார் காஸ்ட்ரோ
அமெரிக்காவினை பகிரங்கமாக எதிர்த்த வெனிசுலாவின் சாவேஸ் புற்றுநோயில் இறந்தார்
யாசர் அராபத் வீட்டுகாவலில் வைக்கபட்டபின் நோயுற்று இறந்தது இன்றும் சர்ச்சையே
இந்திரா, ராஜிவ், பிரேமதாசா போல கொல்வதெல்லாம் அக்காலம், இப்பொழுதெல்லாம் மெல்ல கொல்லும் விஷத்தை காற்றிலோ, நீரிலோ கலந்து எதிராளியினை விட்டு பிடித்து கொல்லும் காலம்
இதனால் வடகொரிய அதிபருக்கும் அந்த பயம் வந்துவிட்டதால் கடும் பதற்றத்திலும் பாதுகாப்பிலும் வருகின்றார்
அணுகுண்டையும் ராக்கெட்டையும் தவிர பலத்த பாதுப்போடு வருகின்றாராம்
ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது
தங்க தலைவியும் ஜூன் 12ல்தான் தமிழகம் வருவதால் சங்கமும் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றது