ஆனந்த கண்ணீருடன் மாஸ்கோ கோப்பை தொடங்குகின்றது
கிரிக்கெட்டில் பிராட்மேன், கபில், டெண்டுல்கர், லாரா என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மரோடோனா என்றொரு வரிசை உண்டு
கால்பந்து கடவுள் பீலே, கருப்பு முத்து என கொண்டாடபட்டவர், அவர் ஆடிய காலத்தில்தான் பிரேசில் மாபெரும் வெற்றிகளை பெற்றது, அவரை ஹீரோவாக கொண்டுதான் இன்றுவரை பிரேசில் கால்பந்தில் அரக்கனாய் நிற்கின்றது
அந்த பீலே இப்பொழுது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ரஷ்ய உலக கோப்பையினை காணவரும்பொழுது மனம் கலங்கிற்று
எத்தனை கோல்கள் அடித்த கால்கள் அவை, அதுவும் கோல்போஸ்ட் அருகே பந்தை எகிற வைத்து அவர் அடித்த சிசர் கட் இன்றுவரை கொண்டாடபடும் நொடி
காலம் எந்த மாவீரனையும் ஒடுக்கி அமர வைக்கும், அது கலைஞரானாலும் சரி , பீலேவானாலும் சரி.
(பீலேவின் வாழ்க்கை சினிமாவிற்கு இசை அமைத்த வகையில் ஏ.ஆர் ரகுமானும் பீலே கால்பந்து வாழ்வில் இடம்பிடித்துவிட்டார்)
அந்த கருப்பு முத்தை முத்தமிட்டு வரவேற்கின்றார் மாரடோனா, கால்பந்து வீரனுக்கு இன்னொரு வீரன் கொடுக்கும் மரியாதை அது
கால்பந்தோடு கால்பந்து போல கரடிகுட்டியாய் உருண்டு ஓடி சென்று கோல் அடிக்கும் அந்த மாரடோனா
இருவரையும் நேரில் சென்று அழைக்கின்றார் புட்டீன்
ஒருவித ஆனந்த கண்ணீருடன் மாஸ்கோ கோப்பை தொடங்குகின்றது